லஞ்ச புகார் எதிரொலி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 19 சர்வேயர்கள் அதிரடி இடமாற்றம்
காஞ்சீபுரம், டிச.27-
லஞ்ச புகார் எதிரொலியாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 19 சர்வேயர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு சோதனை
காஞ்சீபுரத்தில் உள்ள தாலுகா அலுவலகம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப்பணம் பிடிபட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் சந்தோஷ் கே.மிஸ்ராவுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.
அதிரடி இடமாற்றம்
அதன்படி தாலுகா அலுவலகங்களில் உள்ள சர்வேயர்களை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நில அளவை துறை உதவி இயக்குனருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய 19 சர்வேயர்களை இட மாற்றம் செய்து நில அளவை துறை உதவி இயக்குனர் மதனகோபால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்