Breaking News
recent

போலி ரசீது தயாரித்து மோசடி பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.பி. துரைக்கு 3 ஆண்டு ஜெயில்

போலி ரசீது தயாரித்து மோசடி பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.பி. துரைக்கு 3 ஆண்டு ஜெயில்
சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


சென்னை, டிச.30-

பாலிடெக்னிக் அங்கீகாரம் பெறுவதற்கு வங்கியில் பணம் செலுத்தியதாக போலி ரசீது தயாரித்து மோசடி செய்த வழக்கில் முன்னாள் எம்.பி. துரை, இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் லட்சுமி நரசிமëமன் உள்பட 4 பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பாலிடெக்னிக்

வந்தவாசி நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி.யாக இருந்தவர் எம்.துரை. இவர், வந்தவாசி சம்புவராயர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக உள்ளார். எஸ்.மன்னப்பன், டி.டி.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக இருக்கின்றனர். இந்த அறக்கட்டளை சார்பில் வந்தவாசி அருகேயுள்ள பிர்தூர் கிராமத்தில் பாலிடெக்னிக் தொடங்க திட்டமிட்டனர்.

அதற்கான தொழில்நுட்ப அங்கீகாரம் பெறுவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விண்ணப்பித்தனர். இந்த அங்கீகாரம் பெறுவதற்கு வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.25 லட்சம் செலுத்தி, அந்த ரசீதை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ரூ.25 லட்சம் போலி ரசீது

இந்த ரசீதை போலியாக தயாரிக்க திட்டமிட்டனர். அதன்படி, இந்தியன் வங்கியில் ரூ.25 லட்சம் பணமோ அல்லது காசோலையோ செலுத்தாமல் நிரந்தர வைப்புத் தொகை வைத்திருப்பதாக 3-4-98 அன்று போலி ரசீது பெற்று ஏ.ஐ.சி.டி.இ-யின் சென்னை மண்டல அலுவலகத்தில் முன்னாள் எம்.பி. துரை சமர்ப்பித்தார்.

போலி ரசீது தயாரிப்பதற்கு இந்தியன் வங்கி வந்தவாசி கிளையின் முன்னாள் மேலாளர் ஆர்.லட்சுமிநரசிம்மன், மன்னப்பன், டி.டி.சுப்பிரமணியம் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதன்மூலம் ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் இந்தியன் வங்கியை இவர்கள் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். பணம் செலுத்தாமலே போலி ரசீது தயாரித்து மோசடி செய்தது பின்னர் தெரியவந்தது.

3 ஆண்டுகள் ஜெயில்

இதுகுறித்து, முன்னாள் எம்.பி., இந்தியன் வங்கி வந்தவாசி கிளையின் முன்னாள் மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது மோசடி, சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ.போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. 11-வது கூடுதல் கோர்ட்டு சிறப்பு நீதிபதி எஸ்.ரங்கராஜ× இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

``இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் ஆவணங்கள் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு உள்ளன. இந்தியன் வங்கியின் வந்தவாசி கிளை முன்னாள் மேலாளர் லட்சுமி நரசிம்மனுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. முன்னாள் எம்.பி.துரை, மன்னப்பன், டி.டி.சுப்பிரமணியம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது'' என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

முன்னாள் எம்.பி.க்கு ஜாமீன்

அதைத் தொடர்ந்து முன்னாள் எம்.பி. துரை அபராதத் தொகை 30 ஆயிரத்தை சி.பி.ஐ. கோர்ட்டில் செலுத்தினார். பிறகு அவருக்கான சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் அளித்து நீதிபதி ரங்கராஜ× உத்தரவிட்டார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.