இந்திய சிறைகளில் உள்ள 66 பாகிஸ்தானியர்கள் விடுதலை
அமிர்தசரஸ், டிச.30-
பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய சிறைகளில் உள்ள 66 பாகிஸ்தானியர்களை மத்திய அரசு விடுதலை செய்துள்ளது. அமிர்தசரஸ் சிறையில் இருந்து மட்டும் 14 பேர் விடுதலையாகிறார்கள். டெல்லி சிறையில் இருந்து ஒருவரும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில சிறைகளில் இருந்து 51 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
அவர்கள் அனைவரும் அட்டாரியில் இருந்து சாலை வழியாக பாகிஸ்தானுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளனர். விடுதலையாகும் 66 பேரில் இரண்டு பெண்களும் உண்டு. ஜுபைன் மற்றும் அவருடைய மகள் ரோசன் ஆகிய அந்த இருவருடைய பாஸ்போர்ட்டில் சில கிழிசல்கள் இருந்ததால் 4 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்