மனைவி விவாகரத்து செய்ததால் ஆத்திரம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று துப்பாக்கியால் சுட்டார் 6 பேர் பலி
லாஸ் ஏஞ்சல்ஸ், டிச.27-
திருமணமான ஒரு ஆண்டில் மனைவி விவாகரத்து செய்ததால் ஆத்திரம் அடைந்த ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் மனைவி வீட்டுக்கு சென்று துப்பாக்கியால் சுட்டார். இதில் மனைவி உள்பட 6 பேர் பலியானார்கள்.
பழிவாங்க திட்டம்
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்தவர் புரூஸ் ஜெப்ரி பர்டோ, வயது 45. இவர் திருமணம் கடந்த ஆண்டு தான் நடந்தது. இவர் மனைவி, ஒரு ஆண்டுக்குள்ளேயே அவரை விவாகரத்து செய்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தன் மனைவியை பழிவாங்க திட்டம் தீட்டினார்.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, அவர் தன் வீட்டில் விருந்து கொடுத்தார். இதில் 30 பேர் கலந்துகொண்டனர். இந்த விருந்து நிகழ்ச்சியின்போது, நள்ளிரவு நேரத்தில் பர்டோ, கிறிஸ்துமஸ் வேடத்தில் மனைவி வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்.
கதவை திறந்த சிறுமி ஒருத்தி, கிறிஸ்துமஸ் வேடத்தில் வந்தவரை பார்த்ததும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டவராக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அனுமதித்தார்.
சரமாரியாக சுட்டார்
வீட்டுக்குள் நுழைந்ததும், அவர் தன் உடைக்குள் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார். இதில் அவர் மனைவி உள்பட 6 பேர் பலியானார்கள். இதை பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று அங்கு இருந்து ஓடிவிட்டனர்.
பிறகு பர்டோ அந்த வீட்டுக்கு தீவைத்தார். வீடு மளமள என்று பற்றி எரிய தொடங்கியதும், அவர் அங்கு இருந்து வெளியேறினார். அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தில் 8, 13 மற்றும் 16 வயது உள்ள 3 சிறுமிகள் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
AdiraiPost
ஆத்திரம்
கிறிஸ்துமஸ்
மனைவி
விவாகரத்து
மனைவி விவாகரத்து செய்ததால் ஆத்திரம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று துப்பாக்கியால் சுட்டார் 6 பேர் பலி
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்