Breaking News
recent

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்
155 பேர் பலி; 200 படுகாயம்


பாலஸ்தீன நாட்டின் காசா கடற்கரையோர பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று பகல் 111/2 மணி அளவில் திடீரென சரமாரியாக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இதில் 155 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். போலீஸ் தலைமையகம் உள்பட 40-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களின் மீது இந்த தாக்குதல் நடந்தது.

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் மேற்கு பாலைவனப் பகுதியான நெசவ் மீது பாலஸ்தீனம் தாக்குதல் நடத்தியது. ``ஒரு வாரமாக நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப் பட்டது. இது தொடரும், விரிவான முறையில் தாக்குதல் நடத்தப்படும், தேவைப்பட்டால் தீவிரமாக தாக்குதல் நடத்துவோம்'' என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.