மனமுடைந்த தாய், மகனுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை
மதுரை,டிச,27_
வெளிநாடு சென்ற கணவன் வீடு திரும்பாததால் மனமுடைந்த தாய் தனது மகனுக்கு....
விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள உட்கடை கிராமம் பெரியகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் எலிசபெத் ராணி(30). இவருக்கும் மதுரையை சேர்ந்த வெங்கடேசனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 9 வயதில் கௌதம் என்ற மகனும் உள்ளார். வெங்கடேசன் வேலைக்காக வெளிநாடு சென்றார். எலிசபெத் ராணி மகனுடன் தனது தந்தை வீட்டில் இருந்து வந்தார். பல ஆண்டுகளாகியும் கணவன் வராததால் மனமுடைந்த எலிசபெத் ராணி சம்பவத்தன்று இரவு வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகு தனது மகன் கௌதமுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் விஷத்தை குடித்தார். இதில் இருவரும் மயங்கி கிடந்தனர். இவர்களின் முனகல் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த கிருஷ்ணன் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். ஆனால் வழியிலேயே இருவரும் இறந்தனர். இது குறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்