- நாளை ஆங்கில வருட கணக்கு படி 2011 ஆம் ஆண்டு துவங்க உள்ளது. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
- இது கிருத்துவர்களின் வருடபிறப்பாகும். இதை முஸ்லிம்களில் சிலர் கொண்டாடுகின்றனர்.
- இது முற்றிலும் தவறாகும்.
- வாழ்த்து செய்தியும் புத்தாடை அணிவதும் கூடாது.
- சென்னை வாழ்முஸ்லிம்களே புத்தாண்டு கொண்டாட்டம்என்ற பெயரில் அனாசாரத்தை அரேங்கேற்றாதீர்கள்.
- புத்தாண்டு வாழ்த்துஎன்ற பெயரில் வாழ்த்துசெய்தி அனுப்பாதீர்கள்.
வெள்ளி, 31 டிசம்பர், 2010
புத்தாண்டு கொண்டாடலாமா?
புதன், 29 டிசம்பர், 2010
அதிரையில் ஜனவரி 14,15 கல்வி விழிப்புணர்வு மாநாடு!
கல்வி நிலையங்களின் நிர்வாகிகளே! பெற்றோர்களே! பெரியோர்களே! உங்கள் பராமரிப்பில் இருக்கும் மாணவச் செல்வங்களை இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் வந்து கலந்து பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம். நீங்களும் வந்து கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, பயன் பெறலாம்.
அதிரைநிருபர்,
அதிரை இஸ்லாமிக் மிஷன்.
அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை, அதிரைநிருபர் வலைக்குழுமம் மற்றும் அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து நடத்தும் இந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டிற்க்கு அதிரைநிருபர் வலைக்குழுமம் முழு முதற்காரணம் என்பதை நாம் அறிவோம்.
கிடைக்கும் செய்திகளையும் தகவல்களையும் பதிந்து 'நோட்டீஸ் போர்ட்'டாக இல்லாமல் சமுதாயத்தின் தேவையறிந்து, கட்டுரைகள் வெளியிட்டு கருத்துரைகளை உன்னிப்பாக அவதானித்து, நமது மக்களின் ஆர்வத்தையறிந்து, இன்று செயல் வடிவம் கொடுத்து வெற்றிக் களத்தில் நிற்கிறார்கள்! அல்ஹம்துலில்லாஹ்.
தொடர வேண்டும்:
இந்த கல்வி விழிப்புணர்வு மாநாடு முதலாவது மாநாடாக அமையட்டும் இனிவரும் வருடங்களும் தொடர்ந்து நடத்தவேண்டும்.
தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!
‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி
செவ்வாய், 28 டிசம்பர், 2010
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்(அமீரகக் கிளை) கட்டுரைப் போட்டி
ஞாயிறு, 26 டிசம்பர், 2010
பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 20 பேர் பலி



தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.
இன்று 26/12/2010 காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் பெரிய பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித் தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.
தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.
இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலிகாப்டரும்,அதிநவீனஹோவர்கிராப்ட்படகும் ஈடுபடுத்தப்பட்டுவருகிறது.
இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 20பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்தபடி போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 20 பேர் வரை இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் தெரிவிக்கிறது.
கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரியபட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.
படுகேவலமான பாப்ரிமசூதி தீர்ப்பு. பேரா.அருணன். VIDEO.
பாபர் மஸ்ஜித் நீதியை தேடும் பயணங்கள்
உரை: பேரா. அருணன்
தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமுமுக சார்பில் டிசம்பர்-06 அன்று நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் பேரா. அருணன் ஆற்றிய உரை.
Prof.Arunan Speech Part-01 உரை பகுதி -01
Prof.Arunan Speech Part-02 உரை பகுதி -02
Prof.Arunan Speech Part-03 உரை பகுதி -03
வியாழன், 23 டிசம்பர், 2010
பாஜக ஆட்சியில் ரூ. 1.43 லட்சம் கோடி இழப்பு: கபில் சிபல்
திங்கள், 20 டிசம்பர், 2010
முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்
ஆனால், இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில முஸ்லிம் பெண்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் கவலைக்குரியவிடயமாகும்.
முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவமான ஒழுக்கங்கள், பண்புகள், கலாசாரம் என்பவற்றை இழந்து வீழ்ச்சி நிலைய நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைக்கு காரணங்கள் பல இருந்தேபாதும் அவற்றில் சிலதை இங்கு நோக்கலாம்.
முதலாவதாக, தொடர்புசாதனங்கள் முஸ்லிம் பெண்களின் ஒழுக்க, கலாசார, பண்பாட்டு விடயங்களில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. தொலைக் காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் சினிமாக்களும், தொடர்நாடகங்களும் வானொலிகளில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற பாடல்களும் இதில் முதன்மை பெறுகின்றன.
ஒரு காலத்தில் முஸ்லிம் பெண்கள் திரையரங்குகளுக்கு செல்வது மிக அரிதாகேவ காணப்பட்டது. ஆனால், இன்று ஹிஜாப் அணிந்த நிலையில் குடும்பத்தவர்களுடன் இணைந்து திரையரங்குகளுக்கு செல்கின்ற பெண்களை காண்கின்றோம். கிராமப்புற வீடுகளில் திரையரங்குகளின் இடத்தை தொலைக்காட்சி வகித்து வருகின்றது.
மிகுந்த ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்கள் இன்று வெட்க உணர்வற்று, பண்பாடற்று, ஒன்றாக அமர்ந்து சினிமாக்கைளயும் ஆபாச பாடல்கைளயும், நாடகங்களையும் பார்த்து ரசிப்பதை பரவலாக காண முடிகின்றது.
வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என எந்த ஊடகத்தை எடுத்தாலும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் முஸ்லிம் பெண்களே முன்னணியில் திகழ்கின்றனர். வானொலியை செவிவிமடுத்தால் ஹலோ என ஒரு முஸ்லிம் பெண்தான் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பாள். தொலைக்காட்சியிலும் இதே நிலைதான்.
இஸ்லாமிய நூல்கைளயும், சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் மிகவேகமாக குறைந்து வருகின்றது. பாடசாளைகளில் உள்ள நூலகங்களில் நிறைந்து காணப்படும் இஸ்லாமிய நூல்கைள விடவும் காதல் கதைகைளக் கொண்ட நாவல்களும் கவிதைத் தொகுதிகளும்தான் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.
முன்தினம் பார்த்த சினிமாக்களினதும் நாடகங்களினதும் விமர்சனம் அடுத்தநாள் பாடசாலை வகுப்புகளில் நடைபற்று வருகின்றது. சில பெண்கள் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக சினிமா நடிக, நடிகைகளின் புகைப்படங்கைள வைத்துக்கொண்டு அதை ரசிப்பதிலேய கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் வேடிக்கைத்தனமாக வகுப்பைறகளில் சிகையலங்காரம், முக அலங்காரம் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.
எமது முஸ்லிம் பெண்களின் ஒழுக்கவீழ்ச்சிக்கு இரண்டாவது காரணமாக அமைவது ஆடைகளாகும். இன்று ஒரு ஆணுக்கு நிம்மதியாக பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்நிய பெண்கள் எவ்வாறு இருந்த போதிலும் அவர்கைள ஒத்தவர்களாக எமது முஸ்லிம் பெண்களும் மாறிவிட்டனர். சாதாரணமாக டீ-சேர்ட், காற்சட்டை, போன்றவற்றை அணிகின்றனர்.
இன்னும் சிலர் தாம் அணிகின்ற ஹபாயாவையும் கூட நாகரிகம் என்றபெயரில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மிக இறுக்கமாக அணிந்துவருவதோடு அதன் நோக்கத்தை அறியாதவர்களாகவும் செயற்படுகின்றனர்.
முஸ்லிம் பெண்களின் கலாசார சீரழிவிற்கு இன்னொரு காரணமாக மேலதிக வகுப்புக்கைளயும் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. நகர்ப்புறங்களுக்குச் செல்லும் சில முஸ்லிம் மாணவிகள் பஸ்களிலும் பஸ்நிலையங்களிலும் வகுப்புக்களிலும் வரம்புமீறி நடந்துகொள்கின்றனர். அத்துடன் இரவு வேளைகளிலும் இத்தகைய வகுப்புகளுக்கு தனியாக சென்றுவருகின்றனர். இது பாரிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதை அனைவரும் அறிவர்.
எனேவ, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான்கொண்டுள்ள முஸ்லிம் பெண்கள் தமது ஈமானை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளவேண்டியிருக்கின்றது. றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களை இன்னுமொரு முறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருகின்றது. இது பெண்களுக்கு மட்டுமேயான விடயமல்ல அவர்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற பெற்றோர்கள், பாதுகாவலர்களும் இவ் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
‘நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்’ என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு பொறுப்பாளர்கள்.
எனவே, ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.‘நீங்கள் உங்கைளயும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்’
என்று அல்குர்ஆன் கூறுவைத நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நரக நெருப்பின் விறகுகளாக நாம் மாறிவிடாதிருக்க அல்லாஹ் எமக்கு அருள்பாலிக்க வேண்டும். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் மாறுவதற்கு அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம்.
இதை அளித்தவர்:
Adirai Hafil.J.M.Naina Mohamed @ ரியாத்
ஞாயிறு, 19 டிசம்பர், 2010
ஷம்சுல் இஸ்லாம் சங்க பொருளாளர் அல்ஹாஜ் எஸ். ஏ. எம் ஜமாலுத்தீன் மரணம்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அதிரையில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:அதிரை அஹ்மது
தமிழீழம் அமைவதை ஏன் பார்பனர்கள் எதிர்கிறார்கள்?
தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கை!
தமிழீழம் அமைப்பதற்காக ஆயுத வழியில் போராடினார்கள்.அந்த போராட்டம் சென்ற வருடம் முடிவுக்கு வந்தது. இதனை அனைவரும் அறிவோம்.
இலங்கையில் தனி நாடு கேட்பதால் இலங்கையரசு எதிர்கிறது. இதில் ஒரு நியாயம் உள்ளது என்று சொல்ல முடியும். ஆனால், தமிழீழம் அமைவதை பார்பனர்கள் ஏன் எதிர்கிறார்கள்?(உதாரணம்:சோ,ராம்,சு சுவாமி,ராம கோபாலன்) இது நாள் வரை பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
தமிழீழ நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, தமிழர்கள் திராவிடர்கள் அவர்களை எதிர்ப்பது, அழிப்பது பார்பனர்களின் 'மத கடமை' என்றார். இது சரியான பதிலா?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நான் பேசிய வகையில் பல தமிழர்களுக்கு தெரியவில்லை.உங்கள் பதில் தமிழீழ போராட்டத்தை அறிய விரும்புவோருக்கு உதவியாக அமையும்!
வியாழன், 16 டிசம்பர், 2010
வாசகர்களுக்கு அறிய வாய்ப்பு
புதன், 15 டிசம்பர், 2010
மரண அறிவிப்பு
சனி, 11 டிசம்பர், 2010
முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு
தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.
போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.
சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.
உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?
தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.
வெள்ளி, 10 டிசம்பர், 2010
ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பா.ஜனதா ஆட்சியில் அதிகமான முறைகேடு!
பாராளுமன்ற மேல் சபை எம்.பி. ராஜீவ்சந்திரசேகர், கடந்த வாரம் ஒரு தகவல் வெளியிட்டார். அதில் அவர், “தொலை தொடர்புத் துறையின் புதிய கொள்கையால் டாடா நிறுவனம் அதிக பலன் பெற்றுள்ளது. டாடா நிறுவனத்துக்கு சாதகமாக ஆ.ராசா நடந்து கொண்டார்” என்று கூறி இருந்தார்.
ராஜீவ் சந்திரசேகருக்கு பதில் அளித்து தொழில் அதிபர் ரத்தன் டாடா கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரையும், ஆளும் கட்சியையும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் கடிதத்தில் தெரிகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
டாடா தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு ஆ.ராசாவோ அல்லது முந்தைய அந்த துறை அமைச்சர்களோ எந்த வகையிலும் எந்த சலுகையையும் காட்டவில்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான 2008-ம் ஆண்டு கொள்கை, விலையை ஒழுங்குப்படுத்தும் சக்தி வாய்ந்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்துள்ளது.
தொலைத் தொடர்பு கொள்கை கள் அமல்படுத்தப்படுவது தாமதமாகி வந்தது. அதையும் 2008-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் கொள்கை உடைத்துள்ளது.
உண்மையைச் சொல்லப் போனால், தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் கொள்கை களில் பா.ஜ.க. ஆட்சித் தான் அதிக முறைகேடுகள் நடந்துள்ளது. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு விவகாரம் குறித்து தற்போது நடந்து வரும் விசாரணையை நான் ஆதரிக்கிறேன். அதே சமயத்தில் சி.பி.ஐ. நடத்தி வரும் வழக்கு விசாரணை வரம்பு 2001-ம் ஆண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று நம்புகிறேன்.
தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு விரைவில் அடங்கி விடும். அதன் பிறகே உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
அப்போது உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை இந்திய மக்கள் தீர்மானிக்க முடியும்.
அரசியல் லாபத்துக்காகவும், தங்களை பாதுகாத்து கொள்ளவும் யார்-யார் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பது அப்போது தெரிய வரும்.
இவ்வாறு தொழில் அதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
http://www.maalaimalar.com/2010/12/09135830/spectrum-affair-rathan-tata-c.html
புதன், 8 டிசம்பர், 2010
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு அதிரை போஸ்டில் நேரடி ஒளிபரப்பு!
மாநாடு சம்மந்தமான கருத்துக்களை இங்கு பின்னூட்டம் மூலம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
ஞாயிறு, 5 டிசம்பர், 2010
இன்று 06122010
இன்று 06122010
தேசந்தந்தை காந்தி பிறந்த நாளை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்தியா நினைத்து பார்க்கிறது. இரண்டு மதத்தவரும் இப்போது போடும் வழக்கை தொடர்ந்துகொண்டே இன்று வரை இழுத்தடித்து இருந்தால் இந்திய மண்ணில் இத்தனை உயிர்கள் அனாவிசயமாக போயிருக்காது. எப்போது நாகரீகம் எனும் ஒரு சர்க்யூட்டில் பிறச்சினையோ அப்போதெல்லாம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது...இதை இன்று வரை உலகவரலாறு எடுத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.
ஒரு Flash Backசென்னையின் கக்கூஸ் நாத்தமில்லாத இரவு நேரம் சென்னைக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரசில் திருவாரூர் ஸ்டேசனில் ரயில் நிக்க நான் ஆழ்ந்த நித்திரையில் என் எக்கோலாக் சூட்கேசில்[ நியு காலேஜ் மாணவர்களின் ஸ்டேடஷ் சிம்பள்] தலைவைத்து பெர்த்தில் தூங்கி கொண்டிருக்க...
'லத்தியால் நான் தலைவைத்து தூங்கிகொண்டிருந்த பெட்டியில் அடித்து எழுப்பிவிட்டு "வெடிகுண்டு இருக்கானு இந்த ட்ரயினை செக் பண்ரோம்" என அந்த போலீஸ் சொல்ல நானும் இன்ஸ்டேன்ட்டா..' ஆமாய்யா வெடிகுண்டு உள்ள பொட்டியை தலைக்கு வச்சிதான் தூங்குவானுக'
...இந்த போலீஸ்தான் ……..ஸ்காட்லாண்ட் யார்ட்????......
ஞாயமான கேள்வி
எதற்க்கெடுத்தாலும் "துவாச்செய்யுங்க அத்தா..துவாச்செய்ங்க ..." என சொல்பவர்கள் , எதிரில் நின்று கேட்கும் மனிதர் துவா எதற்க்கு செய்ய வேண்டும் என தெரியாமலேயே போய் விடுகிறார். துவா செய்ய சொன்னவரும் 'அன்றைக்கு சொன்னேனே துவா செஞ்சீங்களா/' என கேட்காமல் ரெக்கார்டெட் மெஸ்ஸேஜ் மாதிரி மற்றவரிடமும் அதை ஒப்பிக்க சென்று விடுகிறார்.
நீதி: "துவா செய்ய காரணம் 10 வரிக்கு மிகாமல் விளக்கவும்'
ஒரு சின்ன கதை: ஒரு நல்ல அரசன் ஆளும் இடத்தில் ஒரு துறவி ஊர்க்கோடியில் இருந்தார். அங்கு எல்லா மக்களும் போய் அந்த துறவியிடம் அறிவுரை பெற்று வந்திருக்கின்றனர். அந்த மன்னனுக்கு ஒரு ஆச்சர்யம் துறவி..அதுவும் பிச்சைக்காரன் கோலத்தில் இருப்பவனிடம் ஏன் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக போகிறார்கள்?. ஆர்வத்தால்
ஆட்களிடம் சொல்லி துறவியை அழைத்துவந்து 'ஏன் உங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ? " என கேட்க ..”நாளை சொல்கிறேன்” எ ன துறவி சொல்லி இருக்கிறார். அந்த இரவு அரண்மனையில் தங்க அனுமதியை அரசன் தர ..
' நீங்கள் எந்த விதமான அறையில் தங்க ஆசை?..---.அரசன்.
'உன் அறையை விட விசாலமான வசதியான அறையில்...'----துறவி
என்னமாதிரியான சாப்பாடு'---அரசன்
உன் சாப்பாட்டை விட ஆடம்பரமான சாப்பாடு—துறவி
அரசனுக்கு ஒரே குழப்பம் "எப்படி உங்களைப்போய் துறவி என சொல்கிறார்கள் மக்கள்? இப்படி பேராசை பிடித்து அலைகிறீர்கள்...அரசன்.
நாளை தெரிந்துகொள்வாய் அரசே...---துறவி
மறுநால் காலையில் துறவி புறப்பட்டு தனது இடத்துக்குபோக வேண்டும் , போகும்போதும் அரசனுடைய குதிரையை விட நல்ல குதிரை , அரசனின் உடையை விட நல்ல உடை இப்படி துறவி கேட்க , ல்லாம் தரப்பட்டது. அரசனும் வழியனுப்ப அவருடன் செல்ல ஊர்க்கோடியில் அந்த துறவி தனக்கு கிடைத்த குதிரை, நல்ல உடை அனைத்தையும் திருப்பி அரசனிடமே கொடுத்துவிட்டு தனது கிழிந்த உடையுடனும் வெறுங்காளுடனும் நடக்க.....
அரசன் 'இன்று தெரியும் என்று சொன்னீர்களே...'
'என்னால் நேற்று கிடைத்த அத்தனை சுகத்தையும் , வசதியையும் ஒறே நொடியில் தூக்கி எறிந்து விட்டு வாழ முடியும் அரசே உனக்கு அந்த மனப்பக்குவம் இருக்கிறதா?...துறவியின் கேள்வியில் அரசன் அசந்து விட்டான்.
வாழ்க்கையில் நமக்கு சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது ஆனால் சொந்தம் கொண்டாட எதுவும் இல்லை. இந்த தாமரை இலை நமக்கு கற்றுதரும் பாடம் என்ன தெரியுமா?...தண்ணீரில் இருந்தாளும் தண்ணீர் ஒட்டாத அந்த சூழல்...நம்மை சுற்றி எல்லாம் இருந்தாலும் எதுவும் நமக்கு சார்ந்ததல்ல. பல பிரச்சினைகளுக்கு காரணம் ' அது என்னுடையது” என்ற வாதம்தான்.
உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை.
ZAKIR HUSSAIN
Blog Archive
-
▼
2010
(253)
-
▼
December
(18)
- கஷ்மீர்:நேருவின் மீதும் வழக்குத் தொடருங்கள் - அருந...
- இஸ்லாமிய நோக்கில் ஊடகம்! As-Sheik H.M.Minhaj
- பாபரி மஸ்ஜித்- தொடர்பான தகவல்கள் தமிழில்
- இன்று 06122010
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு அதிரை போ...
- ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பா.ஜனதா ஆட்சியில் அதிகமான மு...
- முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.ம...
- மரண அறிவிப்பு
- வாசகர்களுக்கு அறிய வாய்ப்பு
- தமிழீழம் அமைவதை ஏன் பார்பனர்கள் எதிர்கிறார்கள்?
- ஷம்சுல் இஸ்லாம் சங்க பொருளாளர் அல்ஹாஜ் எஸ். ஏ. எம்...
- முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்...
- பாஜக ஆட்சியில் ரூ. 1.43 லட்சம் கோடி இழப்பு: கபில் ...
- படுகேவலமான பாப்ரிமசூதி தீர்ப்பு. பேரா.அருணன். V...
- பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 20 பேர் பலி...
- பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்(அமீரகக் கிளை) ...
- அதிரையில் ஜனவரி 14,15 கல்வி விழிப்புணர்வு மாநாடு!
- புத்தாண்டு கொண்டாடலாமா?
-
▼
December
(18)
-
►
2011
(257)
-
►
December
(10)
- CM.தாஜுதீன் மகன் திருமணம்: செக்கடிப்பள்ளியில் நடைப...
- "இஸ்லாமிய இலக்கியக் காவலர்' மு.செய்யது முஹம்மது ஹச...
- சிறுபான்மையினருக்கு உள் இட ஒதுக்கீடு!
- சுப்பிரமணிய சாமிக்கு கைது வாரண்டு!
- குடும்ப அட்டைகள் கால அவகாசம் மேலும் ஒரு ஆண்டுக்கு ...
- மீன் எண்ணெய் ரத்த புற்று நோயை கட்டுப்படுத்தும்: ஆய...
- அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு!
- ஷம்சுல் இஸ்லாம் சங்கம் என்ன செய்யும்?
- அதிரையில் எலி காய்ச்சல்!
-
►
December
(10)
-
►
2012
(41)
-
►
April
(10)
- சித்தீக் பள்ளிவாசலில் நடப்பது என்ன? கள ஆய்வு!
- துலுக்கா(தக்வா)பள்ளியில் ஒட்டப்பட்டு, கிழித்தெரியப...
- சித்தீக் பள்ளிவாசல் நிலம் மோசடியா? கள ஆய்வு 2
- பிபிசி ஊடகவியல் கல்லூரி
- வேண்டாத குப்பைகளை விலக்குவோம்
- பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களுக்கு தீவைப்பு(பட...
- முஸ்லிம்களுக்கு காத்திருக்கும் ஆபத்துகள்?
- சாதிவாரி கணக்கெடுப்பு: முஸ்லிம்களின் கவனத்திற்கு.....
- AFFA வின் அதிரை கால்பந்து இன்று இறுதி ஆட்டம்!
- அதிரை வருகிறார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்!
-
►
May
(24)
- சமூக உருவாக்கத்தின் அடிப்படைகளை ஊடகங்களே தீர்மானிக...
- 26-ம் ஆண்டில் மணிச்சுடர் நாளிதழ்!
- அதிரையில் முஸ்லிம்லீக் தலைவர்!
- ஜேர்மனியில் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகவே புதிய கட்...
- ஊடகங்கள் அடுத்த தலைமுறையின் சிந்தனைகளை நேர்வழிப்பட...
- முஸ்லிம் லீக் தலைவர் பேசியது தவறா? சலசலப்பில் அதிர...
- யுனெஸ்கோ பிராந்திய ஆலோசகராக அசன் முகமது ஜின்னா நிய...
- முஸ்லிம்களுக்கான தனி ஊடகம்!
- +2 results 2012
- கப்ருகளில் ஸியாரத்
- தமுமுக தொண்டர் மீது கொலைவெறித்தாக்குதல்;பள்ளிவாசலை...
- இஸ்லாம் கூறும் தவ்ஹீத் - யூஸுப் அல் கர்ளாவியின் கு...
- கொலைவெறியாட்டம் நடந்த போது... காணொளி பேட்டி
- எகிப்து தேர்தல்: இஹ்வானுல் முஸ்லிமீனின் முர்ஸி தொட...
- கந்தூரி ஊர்வலம் - தடைவிதிக்க கோரிக்கை...
- டெங்கு காய்ச்சல்: தகவலும் எச்சரிக்கையும்!
- பட்டுக்கோட்டையில் நடந்த சமூக பொருளாதார கல்வி விழிப...
- நான் புரிந்துக்கொண்ட நபிகள் - A. Marx உரை!
- கல்லூரியில் படிக்க உதவித்தொகை எங்கு கிடைக்கும்?
- தமிழக முஸ்லிம்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய இலங்கை அர...
- BSNL சார்பில் கையடக்க கணினி அறிமுகம்: விலை ரூ.3495...
- Free VIsa 2 U.K.,U.S.A.& AUSTRALIA
- துபாய் பயணிகளை பரிதவிக்கச் செய்யும் ஏர் இந்தியா எக...
- MoonTv Live
-
►
April
(10)









