Breaking News
recent

அதிரையில் எலி காய்ச்சல்!


அதிராம்பட்டினத்தில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் தற்போது நலமுடன் உள்ளனர். வேறு யாருக்கும் பாதிப்பு உள்ளதா என சுகா தார துறையினர் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் எலி காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக தெரியவந்ததை அடுத்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் மதிவா ணன் உத்தரவின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாம்பன், பூச்சியியல் வல்லுநர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழு அதிராம்பட்டினம் பகுதியில் முகாமிட்டு நேற்று முன்தினம் முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.




நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீர் இணைப்புக்குழாய் ஆகியவற்றை ஆய்வு செய்து தண்ணீரில் குளோரின் போடுகின்றனர். காய்ச்சி வடிகட்டிய தண்ணீ ரையே குடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாம் பன் கூறுகையில், Ôஅதிராம்பட்டினத்தில் எலி காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பெரியசாமி (35), சித்ரா (30) ஆகியோரின் ரத்த மாதிரியை எடுத்து கட ந்த 19ம் தேதி ஆய்வுக்கு தஞ்சை அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களு க்கு எலி காய்ச்சல் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட் டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் 7 நாள் சிகிச்சை க்கு பின் நலமாக உள்ள னர். மேலும், எலிக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக அதிராம்பட்டினத்தில் உள்ள 21 வார்டுகளிலும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று ஆய்வு மேற் கொ ண்டு வருகின்றனர் என்றார். 
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.