Breaking News
recent

அதிரை பிரைட் மீராவின் தேசபற்று! காணொளி,படங்கள்


சுதந்திர தினம் என்றதும் சுதந்திரத்திற்காக போராடிய போராளிகளைதான் நம்நினைவுக்கு வரும். ஆனால், அதிராம்பட்டினத்தில் இன்னும் கூடுதலாக பிரைட் மீராவும் ஞாபகத்திற்கு வருகிறார்.

ஆம்!நம் நாட்டின் சுதந்திரம் என்பது அவருக்கு 365நாட்களுமே நினைவுதரும் நாட்கள்தாம். அதனால்தான்,ஒவ்வொரு ஆகஸ்ட்டு 15 அன்று தனது உணர்வுகளை வெளிப்படுத்த தனது கைத்திறன் மூலம், தேச கொடிகளால் அலங்காரம் செய்யப்பட்ட கப்பல்,கோபுரம் என செய்துள்ளார்.
இந்த வருடம், கலங்கரை விளக்கு செய்துள்ளார்.(அடுத்த சுதந்திரதினத்திற்காக இப்போதே தனது கலைப்படைப்பை தொடங்கிவிட்டார்!)





அவரின் இந்த படைப்புகளை மாணாக்கர்கள்,பெற்றோர்,ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்,பொதுமக்கள் என்று பார்வையிட்டு பாரட்டி செல்கிறார்கள்.அதுபோல் பள்ளிவிழாக்களில் அவரின் படைப்புகள் கண்காட்சி வைக்கப்பெற்று பாரட்டையும் குவிக்கின்றது.

மட்டுமல்ல, தமிழில் வரும் அனேக தொலைகாட்சிகளும் அவரின் பேட்டியை வெளியிட்டு மகிழ்ந்து வருகிறது. அப்படியே பருவ இதழ்களும் வெளியிடுகின்றன.

இப்படி, தொடரும் அவரின் சாதனைகளுக்கு மத்தியில் வியாபாரத்தையும் கவனித்து வருகிறார். இதுவரை சுமார் 2.5லட்சம் ரூபாய்வரை செலவு செய்துள்ள அவர்"தேச பற்றை வெளிப்படுத்த எவ்வளவும் செலவு செய்ய தாயார்" என்றும் சொல்கிறார்.

இந்த கலைப்படைப்புகளைக்கு, அவரின் மனைவி,பிள்ளைகள் என்று மொத்த குடும்பமே ஆலோசனை சொல்லி உடன் இருந்து உழைக்கிறது என்று மகிழ்கிறார்.

பேட்டி:பத்திரிக்கையாளர் சாஹுல் ஹமீது

அதிரை வலைப்பூ எழுத்தாளர்களுக்கு,
பிரைட் மீரா அவர்களின் தேசபக்தியை அதிரை மக்களின் சார்பாகவே செய்துவருகிறார்.இது முழு அதிரை மக்களுக்கும் பெருமை அதைத்தான் அவரும் விரும்புகிறார். அவரை ஒரு தெரு என்று "சுருக்கி"விடவேண்டாம்.இது நமது "அன்பான வேண்டுகோள்"!
Unknown

Unknown

1 கருத்து:

  1. அதிரை வலைப்பூ எழுத்தாளர்களுக்கு,
    பிரைட் மீரா அவர்களின் தேசபக்தியை அதிரை மக்களின் சார்பாகவே செய்துவருகிறார்.இது முழு அதிரை மக்களுக்கும் பெருமை அதைத்தான் அவரும் விரும்புகிறார். அவரை ஒரு தெரு என்று "சுருக்கி"விடவேண்டாம்.இது நமது "அன்பான வேண்டுகோள்"!
    ------------------------------------------
    அஸ்ஸலாமு அலைக்கும். இதை நான் வழிமொழிகிறேன். அவர் சிறுவயதில் இருந்து வளர்ந்துவந்த தெருவும் வேறுதான் எனவே அவர் நம்மவர் என்பதே சரி.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.