Breaking News
recent

அதிரை மக்களே! ஆதார் அட்டை பதிவுக்கு 31ம் தேதி கடைசி நாள்

தஞ்சை மாவட்டத்தில் ஆதார் அட்டை பெற பதிவுசெய்வதற்கு வரும் 31ம் தேதி கடைசி நாளாகும் என கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒப்புதல் ரசீது வைத்துள்ள நபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆதார் அட்டை பெற இதுவரை புகைப்படம், கைரேகை மற்றும் விழித்திரை பதிவு செய்யாதிருப்பின் அந்தந்த பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகம் அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் பதிவுசெய்ய கடந்த 10ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 
எனவே ரேஷன் கார்டு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, பாஸ் போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆதாரத்துடன் நேரில் வரும் 31ம் தேதிக்குள் ஆஜராகி பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
மேலும் 2010ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப் பில் பதிவுசெய்ய விடுபட்ட நபர்கள் மற்றும் குடிபெயர்ந்து வந்த நபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தந்த கிராமத்தில் உள்ள விஏஓவை தொடர்புகொள்ள வேண்டும். 
அதிராம்பட்டினம் போன்ற ஊர்களுக்கு பட்டுக்கோட்டை காவல் நிலையம் பின்புறம் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம்
தகவல்:அஹமது ஹாஜா.தமுமுக
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.