Breaking News
recent

சென்னை மண்ணடியில் கூரியர் பார்சல் கொடுப்பதாக நடித்து பெண்ணிடம் 25 பவுன் தங்க நகை பறிப்பு

மண்ணடி புது தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (60) தொழில் அதிபர். இவரது மனைவி ஜெலில் பேகம் (52), நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். கூரியர் பார்சல் வந்திருப்பதாக தெரிவித்தார். பார்சாலை வாங்குவதற்கு கையெழுத்து போடும்படி அவர் கூறினார்.
இதை உண்மை என்று நம்பிய ஜெலில் பேகம் வீட்டில் இருந்து வெளியே வந்தார். கூரியர் கொண்டு வந்ததாக சொன்னவர் கொடுத்த காகிதத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் ஜெலில்பேகம் கழுத்தில் கிடந்த தங்க நகைகளை அறுத்துக் கொண்டு ஓடினார். அவர் ‘திருடன்.. திருடன்..’ என்று சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். இதற்குள் கூரியர் கொண்டு வந்தவர் தப்பி விட்டார்.
இது குறித்து முத்தையால் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. பார்சல் கொண்டு வந்ததாக நடித்தவர் பறித்துச் சென்ற தங்க நகை 24½ பவுனுக்கும் அதிகம் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்தார். வழிப்பறி செய்த கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.