Breaking News
recent

பட்டுக்கோட்டை மகாராணி சில்க் பேலஸில் தீ விபத்து!

பட்டுக்கோட்டை மணிகூண்டு பகுதியில் உள்ள பட்டுசேலைக்கடையில் (மகாராணி சில்க் பேலஸ்) நேற்று(14-9) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கடையில் 2 தளங்களில் பட்டுசேலைகள் விற்கப்பட்டு வருகின்றன.
அதில் மேல் தளத்தில் இருந்த பட்டுசேலைப்பிரிவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பெரும்பாலான சேலைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
மாற்று வழிகள் இல்லாததால் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் மிகவும் சிரமப்பட்டனர். முற்றிலும் புகை சூழ்ந்ததினால் கடைக்கு உள்ளே செல்ல முடியாமல் பக்கவாட்டு சுவரை உடைத்தும் எக்சாஸ் பேன் ஆகியவற்றை உடைத்தும் தீயை அணைத்தனர். 
புகை அதிகமாக இருந்ததால் உடனடியாக சேத மதிப்பை கணக்கிட முடியவில்லை என தீயணைப்புத்துறையினர் கூறினர். மாடியில் இருந்த ஏ.சி.க்கான ஸ்டெப்லைசரில் இருந்து தீப்பிடித்து இருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர்.
நன்றி:மாலைமலர்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.