Breaking News
recent

ஆப்ரேசன் ஹம்லா அதிராம்பட்டினத்தில் இன்று துவக்கம்

அதிராம்பட்டினம் பகுதியில் ஆப்ரேஷன் ஹம்லா இன்று துவங்குகிறது.
தமிழக கடற்கரை பகுதிகளில் ஆப்ரேசன் ஹம்லா இன்று துவங்குகிறது. கடலோர பாதுகாப்பு குழுமம், கடலோர காவல்படை ஆகியவை சார்பில் கடல் மார்க்கம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ஆப்ரேசன் ஹம்லா நடத்தப்படுகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை இந்த ஆப்ரேசன் நடக்கிறது.


ஆப்ரேசன் ஹம்லா இன்று துவங்கி வரும் 1ம் தேதி இரவு வரை நடக்கிறது. தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினம் பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலும், கடலோர பாதுகாப்பு ஆய்வாளர் ஆனந்த் முன்னிலையிலும் ஆப்ரேசன் ஹம்லா நடக்கிறது. இந்த ஆப்ரேசன் ஹம்லாவில் வருவாய் துறை, கஸ்டம்ஸ், கியூ பிராஞ்ச் போலீசார், எஸ்.பி பிரிவு போலீசார் போன்ற துறைகள் கலந்து கொள்கின்றன.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.