அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12–ம் வகுப்பில் படிக்கும் 139 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பிச்சை தலைமை தாங்கினார். இதில் கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, உதயகுமார், சிவக்குமார், கூட்டுறவு வங்கி துணைத்தலைவரும் அதிரை நகர அதிமுக துணைச் செயலாளருமான எம்.ஏ. முகமது தமீம், பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப்அலி, தமிழ்துறை ஆசிரியர் அஜ்முதீன், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர் செய்யது முஹம்மது புகாரி மற்றும் தக்வா பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஹாஜா பகுருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றி: செய்தி,படங்கள்: அதிரை நியூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்