Breaking News
recent

9 பேர் கைது! அதிரை காவல்துறை அதிரடி!!

பட்டுக்கோட்டையை அடுத்த செட்டியக்காடு ரெயில்வே கேட் அருகே மணல் அள்ளிக்கொண்டு 3 மாட்டு வண்டிகள் வந்துகொண்டிருந்தன. இதுபற்றி தகவல் அறிந்த அதிராம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பா விரைந்து சென்று 3 மாட்டுவண்டிகளையும் சோதனையிட்டார். அனுமதி இல்லாமல் காட்டாற்றில் மணல் அள்ளி கொண்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பட்டுக்கோட்டை கரிக்காடு தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது26), வெங்கடேசன் (24), மணிசெல்வம் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்து மாட்டு வண்டிகளையும் கைப்பற்றினார்.
இதே போல பள்ளிகொண்டான் கிராமத்தில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டு வந்து சேண்டாக்கோட்டை ஆறுமுகம் (60) சுந்தரராஜ் (58) சக்திவேல் (35) பள்ளிகொண்டான் தியாகராஜன் (65) பாக்கியராஜ் (28) வெங்கடாசலம் (40) ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களுடைய மாட்டுவண்டிகளையும் கைப்பற்றி அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.