Breaking News
recent

பட்டுக்கோட்டையில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் தகவல்!

தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் இன்று(சனிக்கிழமை) கும்பகோணம் அரசு மகளிர் கலைக்கல்லூரியிலும், வருகிற 28–ந்தேதி(செவ்வாய் கிழமை) பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திலும் நடக்கிறது. இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம்.
இதில் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில்நிறுவனங்கள், முன்னணி ஓட்டல்கள் ஆகிய வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய கல்விசான்றிதழ்கள், குடும்ப அட்டை, சுயவிவரம், புகைப்படம் ஆகியவற்றுடன் அசல் மற்றும் நகலுடன் பங்கேற்று பயன்பெறலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.