கஞ்சிக்கு வழியில்லாத ஏழையும்....
கஞ்சியை ஒருவேளையும் உண்னாத சீமானும்,
நோன்பு கஞ்சிக்கு ஏங்கும் ஏக்கம்-
காரணம் நோன்பு கஞ்சியின் நோக்கம்.
ஒரே உணவு ஒற்றுமையை பறைசாற்றும்!
மாதம் முப்பது நாளும் தெவிட்டாத அமுதம்!
இறைவனின் சீரிய பரகத்தும்,
ரஹ்மத்தும் கலந்த கஞ்சி!
எல்லோரும் ஒரு வருசையில் அமர்ந்து,
நோன்பு கஞ்சி குடிக்கையிலே ....
சாந்தியும் சமாதானமும்,பக்தி மணமும் கலந்து
வயிற்றுக்கும்,மனதுக்கும் நிறைவு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ரொம்ப மனசு நிறைவா இருக்குங்க.உங்க ஊர் நோம்பு கஞ்சி ரொம்ப டேஸ்ட் போங்க.அபுஜுலைஹாவுக்கும் அதிரைபெருமக்களுக்கும் அட்வான்ஸ் நோன்புவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு