திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்
முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேச்சு
திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம். காதர் முகைதீன் எம்.பி. கூறினார்.
பொதுக்கூட்டம்
இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தென் மண்டல மாநாடு மற்றும் முஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்.டி.வெள்ளை தம்பி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.அப்துல்கனி, செய்யது, மொகுதும் கான்சாகிப், வாவுஅப்துல் கப்பார், எஸ்.ஏ.முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச்செயலாளர் அபூசாலிஹ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாநில தலைவர் கே.எம்.காதர் முகைதீன் எம்.பி. பேசியதாவது:-
தென்மண்டல மாநாடு
முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டை தொடர்ந்து தென் மண்டல மாநாடு வருகிற 24-ந் தேதி ராமநாதபுரத்திலும், வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி மத்திய மண்டல மாநாடு தஞ்சையிலும், வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி வட மண்டல மாநாடு வேலூரிலும் நடக்கிறது.
இஸ்லாத்தின் சிறப்பு அம்சமான மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு வருகிற ஜனவரி 31-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளது.
திருமங்கலம் இடைத்தேர்தல்
திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நமது கட்சியும் கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக உழைத்து வருகிறது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தால் தான் சமூக நல்லிணக்கம் உறுதிபடும். சமூக நீதி வலிமை பெறும். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் செம்மையாக செயல்படுத்த முடியும்.
சமுதாய மேம்பாட்டு திட்டம்
இந்திய அரசின் சிறுபான்மை சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்தியாவில் 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த எந்த பகுதியும் சேர்க்கப்படவில்லை. நான் பிரதமரிடம் பேசி தமிழகத்தில் உள்ள சில நகரங்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதனை ஏற்று முதல் முதலாக மேலப்பாளையம் பகுதியை சிறுபான்மை பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வேறு பல பகுதிகளையும் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறு மாநில முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் முகைதீன் எம்.பி. கூறினார்.
முன்னதாக அவர் சீதக்காதி நகரில் காயல்பட்டினம் முஸ்லிம் லீக் கிளை அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
யார்-யார்?
கட்சியின் மாநில பொருளாளர் செய்யது அகமது, தொண்டரணி அமைப்பாளர் கே.எம்.நிஜாம், கமுதி பஷீர், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம். அபுபக்கர், கொள்கை பரப்பு செயலாளர் காயல் மகபூப், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே.முகமது சுலைமான், மாவட்ட செயலாளர்கள் வாவு நாசர், மன்னர் பாதுல் அஸ்ஹப் உள்பட பலர் பேசினர்.
நிறைவில் நகர செயலாளர் பி.எம்.எஸ். சதக்கதுல்லாஹ் நன்றி கூறினார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்