Breaking News
recent

சதாம் உசேன் மாளிகை ஈராக்கியர்களிடம் ஒப்படைக்கப்படும்

சதாம் உசேன் மாளிகை ஈராக்கியர்களிடம் ஒப்படைக்கப்படும்
அமெரிக்கா அறிவிப்பு


பாக்தாத், டிச.27-

ஈராக் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேன் வசித்த அரண்மனையை தன் வசம் வைத்து இருக்கும் அமெரிக்கா அதை வருகிற 31-ந் தேதி ஈராக் அரசிடம் ஒப்படைக்க இருக்கிறது.

2003-ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியபோது, சதாம் உசேன் ஆட்சியை விட்டும், அரண்மனையை விட்டும் ஓடி தலைமறைவானார். அப்போது அவர் வசித்த அரண்மனையை அமெரிக்கா கைப்பற்றியது. அப்போது அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமாக அது இருந்தது. 2004-ம் ஆண்டு அமெரிக்க தூதரகம் அந்த அரண்மனையில் இருந்து செயல்படத் தொடங்கியது. இப்போது தனியாக அமெரிக்க தூதரகம் கட்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த அரண்மனையை காலி செய்ய இருக்கிறது. வருகிற 31-ந் தேதி அந்த அரண்மனை ஈராக்கிய அரசிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு ஈராக் ஜனாதிபதி ஜலால் தலாபாணி இந்த அரண்மனையில் குடியேறுகிறார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.