கீழக்கரை : கடற்கரையில் நான்கு கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்குச் செல்லும் ஏழை மாணவர்கள்
கீழக்கரையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மங்களேஸ்வரி நகர் மற்றும் பாரதி நகர். இந்த கிராமங்கள் கடலோரப் பகுதியாகும். இப்பகுதிகளுக்குச் செல்லும் பாதைகள் மிகவும் குறுகி இருப்பதால் அரசுப் பேருந்துகள் இங்கு வருவதில்லை. மேலும் மினி பஸ் வருவதற்குரிய வழியும் இல்லை. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் நிலையில் இப்பகுதி பெற்றோர்களிடம் பொருளாதார வசதி இல்லை. எனவே மாணவர்கள் கடற்கரை வழியே பள்ளிக்கு நடந்து சென்று வரும் சூழல் இருந்து வருகிறது. இந்நிலையினைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் : ஹமிது யாசின்
AdiraiPost
ஏழை
கடற்கரை
கீழக்கரை
பள்ளி
மாணவர்
கீழக்கரை : கடற்கரையில் நான்கு கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்குச் செல்லும் ஏழை மாணவர்கள்
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்