சௌதியில் இறந்த கணவரின் உடலை இந்தியா கொண்டு வர மனைவி கோரிக்கை
குன்னூர், டிச.27: சௌதி அரேபியாவில் இறந்தவரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
குன்னூர் வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் மரியா ஜோஸ்பின், இவரது கணவர் ஜீன் மாரி மைக்கேல். செüதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நாய் மற்றும் விலங்குகளின் பயிற்சியாளராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் டிச.18-ம் தேதி செüதி கம்பெனியில் இருந்து மரியா ஜோஸ்பினுக்கு வந்த தொலைபேசியில் ஜீன் மாரி அறையில் இறந்து கிடப்பதாகவும் அவரது சடலத்தை எடுத்துச் செல்லத் தேவையான தஸ்தாவேஜுகளை அனுப்பித் தரும்படியும் தகவல் வந்துள்ளது.
இந்த தகவலை அவரது நண்பர் ரவிச்சந்திரன் உதவியுடன் உறுதி செய்துக்கொண்டு அதற்கான ஆவணங்களை செüதி கம்பெனிக்கு அனுப்பி 10 நாட்களாகியும் இதுவரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
எனவே இதுகுறித்து மத்திய அரசு மற்றும் தமிழக முதல்வருக்கு பேக்ஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மரியா தெரிவித்தார், எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தனது கணவரின் சடலத்தை இந்தியா கொண்டுவர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்