Breaking News
recent

தலைமை ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு

தலைமை ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு


திருப்பத்தூர், டிச.27-

பாரதீய தலித் சாகித்திய அகடமியின் சார்பில் புதுடெல்லியில் அகில இந்திய தலித் எழுத்தாளர்களுக்கான மாநாடு நடைபெற்றது. தேசிய தலித்தலைவர் டாக்டர்.சுமனாஷ்க்கர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், இந்திய முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களும், சமுதாய சீர்திருத்தவாதிகளும், கவிஞர்களும் பலர் கலந்துகொண்டனர்.

இதில் திருப்பத்தூர் அடுத்த சவுடேகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், கவிஞருமான சி.மாணிக்கம் கலந்து கொண்டார். அவருக்கு பாரதிய தலித் சாகித்திய அகடமியின் "டாக்டர் அம்பேத்கார் பெல்லோசிப் விருது'' வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணிக்கத்திற்கு திருப்பத்தூர் ரெயில்வே நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பத்தூர் ஓய்வூதிய சங்கத் தலைவர் செ.ராஜகோபால், பாரதியதலித்சாகித்திய அகடமியின் மாநில தலைவர் பெ.சொக்கேசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கூ.குப்புசாமி, மாவட்டபொருளாளர் கு.கருணாநிதி, மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.சின்னராஜ் மற்றும் பலர் வரவேற்றனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.