பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய தேசிய லீக் வலியுறுத்தல்
வாலாஜாபேட்டை, ஜன. 3: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளை இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு ஒப்படைக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்களை நிறுத்திக் கொள்ள தவறும்பட்சத்தில் இந்திய அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் இந்திய தேசிய லீக் வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் வாலாஜா கிளை நிர்வாகிகள் தேர்தல் வெள்ளிக்கிழமை மாநிலச் செயலர் டாக்டர் ஷகீல் தலைமையில் நடைபெற்றது. துணைச் செயலர் கலிமுல்லா வரவேற்றார்.
கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்:
தலைவர்- ஏசனுல்லா, செயலர் கிஷோர் உசேன், பொருளாளர் சையத்கலீம், இளைஞர் அணி செயலர் நியாஸ் பாஷா, துணைத் தலைவர்கள் குப்புதீன், சுபேர்அஹமது.
AdiraiPost
இந்திய தேசிய லீக்
பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய தேசிய லீக் வலியுறுத்தல்
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்