ராமநாதபுரம், வேலூரைக் கேட்க தேசிய லீக் முடிவு
மதுரை, மார்ச் 10: மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம், வேலூர் ஆகிய தொகுதிகளை அதிமுக கூட்டணியில் கேட்டுப் பெற தேசிய லீக் முடிவு செய்துள்ளது என அக் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.பஷீர் அகமது தெரிவித்தார். மதுரையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதாக கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்