தாய்மொழியில் படித்தவர்களுக்கே அடிப்படை அறிவு அதிகம்: மயில்சாமி அண்ணாதுரை
கோபி, மார்ச் 14: தாய்மொழியில் படித்தவர்களுக்கே அடிப்படை அறிவு அதிகம் கிடைக்கிறது. இதனால் சாதிப்பதற்கு வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கிறது என்று சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
கோபி பிகேஆர் மகளிர் கலைக்கல்லூரி 15-ம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் மயில்சாமி அண்ணாதுரை, அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், இந்தியா 2020-க்கு முன்பே வல்லரசாக மாறும்.
நாளைய இந்தியா நிச்சயமாக உலக நாடுகளுக்கெல்லாம் தலைவனாக உயரப்போகிறது. அதற்கு அடையாளம்தான் தற்போது நிலவில் உலா வந்து கொண்டிருக்கும் சந்திரயான்-1 விண்கலம்.
1960 மற்றும் 70-களில் நிலவில் ஆராய்ச்சி நடத்தியிருந்தாலும், தற்போது இந்தியா தன் விண்கலத்தின் மூலம் ஆராயும் இடம் இதுவரை யாரும் கால் பதிக்காத இடம். தற்போது இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவும் அந்த இடத்திற்கு படையெடுத்துள்ளது என்றார்.
AdiraiPost
அறிவு
தாய்மொழி
மயில்சாமி அண்ணாதுரை
தாய்மொழியில் படித்தவர்களுக்கே அடிப்படை அறிவு அதிகம்: மயில்சாமி அண்ணாதுரை
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்