இவர் 8.6.2009 அன்று தன் வீட்டில் ஒரு மாம்பழம் அறுத்தார். அதில், ‘அல்லாஹ்’ என்ற இறைவனின் திருநாமம், அரபியில் எழுதியிருப்பது கண்டு, ஆச்சரியப்பட்டு, என்னிடம் கொண்டு வந்தார். அதைப் புகைப்படம் எடுத்தேன். இதோ அந்த படம்:
இரண்டு புறமும், அப்படியே சரியாக பொருந்திப் போகும் வகையில் இருந்ததை, நான் திருப்பி வைத்து எடுத்துள்ளேன். இறைவன் தன்னுடைய குத்ரத்தை இது போல் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறான். எல்லாப் புகழும் அவனுக்கே!
-சுமஜ்லா.
Please read this post:
பதிலளிநீக்குhttp://jazeela.blogspot.com/2006/08/blog-post_22.html
particularly, the comments.
Better avoid such posts.
நண்பரே!
பதிலளிநீக்குஉண்மையை விளம்புவதில் தவறில்லை. தாங்கள் குறிப்பிட்டிருந்த சுட்டியைப் பார்த்தேன். அதனால் தான் கமெண்ட் மாடரேஷன் வைத்துக் கொள்ள சொல்லி இருக்கிறார்கள்.
இது நானே எடுத்த போட்டோ என்பதால் தான் வெளியிட்டேன்.
பல சாமி சிலைகள் கண்ணீர் வடிக்கும் செய்தியையும், சிலுவைக்குறிகள் வளர்ந்து வரும் செய்தியையும் நாம் பேப்பர்களில் படிக்கிறோம். ஆனால் இது போன்ற இஸ்லாமிய செய்தியை வெளியிட மாட்டார்கள். அதற்குக் காரணம் நம் இனத்தவரின் தாழ்வு மனப்பான்மைதான்.
ஆனால், இது ஒரு அத்தாட்சியே தவிர, இதுவே பூரணமல்ல!