Breaking News
recent

சர்வதேசத் தமிழ் இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி - 2008/09

இறைவனின் மாபெரும் அருளால் கடந்த 2007-08 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி ஒன்றைச் சத்தியமார்க்கம்.காம் நல்லமுறையில் நடத்தியது. அதனைப் போன்றதொரு கட்டுரைப் போட்டியினை தமிழ் மொழியில் இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் சத்தியமார்க்கம்.காம் நடத்தத் தீர்மானித்துள்ளது. இப்போட்டியில் இஸ்லாமிய அடிப்படையிலான, சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நோக்கங்களான ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாயப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வு ஆகியவற்றோடு, எடுத்தாளப்படும் கட்டுரைத் தலைப்பில் சிறப்பான ஆய்வுடன் கூடிய சமுதாயத்தின் எதிர்கால நன்மைக்கான சரியானத் தீர்வைத் தரும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் தங்களின் அரிய சிந்தனைகளைச் சிறப்பான ஆய்வுகளுடனும் அதற்குரிய சரியான தீர்வுகளுடனும் சமர்ப்பிக்க முன்வருமாறு தமிழ் சமுதாய வாசக உள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்..! கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்:::
*திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்.
*சகோதரத்துவம் நிலைபெற…
*வளைகுடா வாழ்க்கை - வரமா? சாபமா?
*இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!
*எது பெண்ணுரிமை?
*இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்னைகளும் தீர்வுகளும்!
*தமிழக முஸ்லிம்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய...
*இஸ்லாமும் மேற்கத்திய கலாச்சாரமும்.
*உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும்!
*சியோனிசமும் உலக அமைதியும்!
*ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்!
*பெண்களின் சமூகப்பொறுப்புகள்.
*நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?
*இஸ்லாமிய குடும்பச்சூழல்.
*இணையமும் இஸ்லாமும்.
*கல்வியில் உயர்நிலை/மேம்பாடு அடைய..
*கலாச்சார ஊடுருவல்.
*குழந்தைகளின் ஆரம்பக்கல்வி இஸ்லாம்!
*மீடியாக்களின் மறைத்தலும் திரித்தலும்–தீர்வு என்ன?
*ஊடகத்துறையில் முஸ்லிம்களின் பங்கு.
*மீடியாவின் முக்கியத்துவம்.
*அசத்தியம் அன்றும், இன்றும்!
*மனித உடல் - இறைவனின் அற்புதம்!
*பயங்கரவாதமும் மேற்கத்திய உலகமும்!
*போராட்டம் - நிலையான வாழ்விற்குரிய ஒரே வழி
--நடுவர்கள் : சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு --
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.