பதிவுகளை மின்னஞ்சலில் கிடைக்க கட்டத்தில் பதியவும்!

Enter your email address:

Delivered by FeedBurner

போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........

>> சனி, 6 பிப்ரவரி, 2010


அஸ்ஸலாமு அலைக்கும்,


போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........


அன்னை இருக்கிறாள் , தந்தை இருக்கிறார் ,
மனைவி இருக்கிறாள் - நானும் இருக்கிறேன்
வெகு தொலைவில்!



அள்ளி முத்தமிடவேண்டிய என் பிஞ்சு குழந்தையை
தொட்டு தடவி பார்த்தேன்
புகைப்படத்தில்!



மழலையின் குரலை கைபேசியில் கேட்டு
கதறி அழுதது என் மனம் கண்களின் வழியாக
சத்தமே இல்லாமல்!



எதிர் திசையில் இருந்து ஒரு குரல்,
அட குழந்தையின் குரலை கேட்டு சந்தோசத்தை பாரு!



எல்லோரிடமும் பேசினேன்-எல்லோருக்கும்
என் குழந்தையை பற்றியே பேச்சு ,
சந்தோசத்தில்!



கடைசி சுற்றாக வந்தது என் மனைவியிடம்
அவள் மட்டும் கேட்டாள் " எப்போ வருவிங்க"!!



என் குரல்வளையில் யாரோ நெரிப்பது போல!
என் குரலை என்னாலே கேட்க முடியவில்லை!



கனைத்து விட்டு பின்பு சொன்னேன்
உங்களுக்காகத்தானே ! - போய்விடலாமா
என தோன்றியது உள்ளத்தில்!
கடைசியாக ஒரு வருடம் என ஆறுதல் சொன்னது என் மனம்!!!



கடைசியாக முடிவு எடுத்தே விட்டேன் நான்,
நாட்டிற்கு செல்ல!
இனியும் தாமதிக்க முடியாது - காரணம்
கம்பெனியில் முடிந்து விட்டது என் வயது வரம்பு!



ஊருக்கு சென்றேன் நான் ,
மூட்டை முடிச்சுடன் - கூடவே
மூட்டு வழியும் முதுகு வலியும்!!!



என் இளமையெல்லாம் பாலைவனத்தில் விட்டு விட்டு
வீடு திரும்பினேன்
விழி பிதிங்கினேன் களவு கொடுத்த கணவனாய்!!!



புகைப்படத்திலே பார்த்து பார்த்து பழகிய
என் பிள்ளைகள் , இப்போதும் பார்கிறார்கள்
அப்படியே !
தூரத்தில் வைத்து.......



கண்களில் பிரகாசத்தோடு
கைகளை நீட்டி அழைத்தேன் அவர்களை,
உள்லிருந்து என் மனைவியின் குரல்
போகமாட்டார்கள் புது ஆளிடம்....
???????




-யாசர் அராபத்.


Read more...

எதிர்த்தவரே ஏற்றார்.

ஸ்டாக்ஹோம்:சுவிட்சர்லாந்து நாட்டில் முஸ்லிம் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கெதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்ததாக கூறப்படும் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் இஸ்லாத்தை தழுவினார்.

மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை துவக்கியவர்தான் ஸ்ட்ரீக். இவர் சுவிஸ் பீப்பிள்ஸ் பார்டியின் முக்கிய நபர்.மினாராக்கள் கட்டுவதை எதிர்த்த அரசியல் தலைவர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியது சுவிஸ் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்தார்.

தற்ப்போது சுவிஸ் நாட்டில் 4 மஸ்ஜிதுகளே உள்ளன. ஐந்தாவது மஸ்ஜிதின் அடிக்கல் நாட்டுவது தானாக வேண்டுமென்பது ஸ்ட்ரீக்கின் விருப்பமாகும். மதரீதியான பொறுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பிரச்சாரகராக தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவிக்கிறார்.

ஐரோப்பியர்களுக்கு இஸ்லாத்தை குறித்து புரிந்துக்கொள்ள விருப்பமுண்டு என்று முஸ்லிம்களின் நலனுக்காக செயல்படும் அரசு சார்பற்ற அமைப்பான ஒ.பி.ஐயின் தலைவர் அப்துல் மஜீத் அல்தாயி தெரிவிக்கிறார்.

மேலும் அவர் கூறும்போது “சிலர் ஸ்ட்ரீக்கைப் போல் பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து அறிய முயற்சிக்கின்றனர். இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே ஸ்ட்ரீக் குர்ஆனை படித்தார். குர்ஆனை ஆழமாக சிந்தித்த போது முடிவு எதிர்மறையாக மாறியது”.என்றார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-சத்தியத்தை நோக்கி.

Read more...

மரண அறிவிப்பு.

>> வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்,நடுத்தெருவைச் சார்ந்த ஜமாலுதீன் காக்கா அவர்களின் மகனும், இமாமுதீன், ஷம்சுத்தீன் ஆகியோரின் சகோதரருமான அல்தாஃப் அவர்கள், இன்று,06-பிப்ரவரி-2010, காலை இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். அன்னாரின் மஹ்ஃபிரத்துக்காக துஆ செய்யுங்கள்.
அல்லாஹுமக்பிர்லஹு வர்ஹமஹு"

Read more...
Related Posts with Thumbnails
அதிரைpost Tamil Unicode Writer

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP