செவ்வாய், 3 ஜனவரி, 2012

அண்ணா ஹசாரே உத்தமரா?

சென்னையில் புத்தக கண்காட்சி 5- ஆம் தேதி தொடங்குகிறது!

 சென்னை புத்தக கண்காட்சி 5-ஆம் தேதி தொடங்குகிறது. கண்காட்சியை சபாநாயகர் டி.ஜெயக்குமார் தொடங்கிவைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சி இந்த ஆண்டு தனது 35- ஆவது ஆண்டில் அடிஎடுத்துவைக்கிறது. இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி வழக்கம்போல சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சி ஒன்றரை லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 682 அரங்குகள் இடம் பெற உள்ளன. அதில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளின் புத்தகங்கள் விற்கப்பட உள்ளன. ஆண்டுதோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாவதால் அவர்கள் வசதிக்கு ஏற்ப விசாலமான நடைபாதைகள், சிவப்பு கம்பள விரிப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் புத்தக கண்காட்சியில் சுற்றி வந்து புத்தகங்கள் வாங்க வசதியாக சக்கர நாற்காலிகள் இரண்டு, புத்தக கண்காட்சி அலுவலகம் அருகே பிரதான ழைவு வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திக்கவும் உரையாடவும் வசதியாக நேருக்குநேர் நிகழ்ச்சி தினமும் நடைபெறும். 18 எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

5- ஆம் தேதி மாலை 5 மணிக்கு கண்காட்சியை சபாநாயகர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைக்கிறார்.

8- ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

பள்ளிப்பாடப்புத்தகங்கள் தவிர பொதுவான நூல்களை வாசிக்கும் வழக்கத்தையும் சமூகம் சார்ந்த சிந்தனையை வளர்க்கும் பேச்சுப்போட்டிகள் 9-ந்தேதி காலை 10 மணிக்கு செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 12- ஆம் தேதி அன்று காலை 10-30 மணிக்கு ராணிமேரி கல்லூரியில் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2- ஆவது பரிசாக ரூ.3 ஆயிரம், 3- ஆவது பரிசாக 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள் பரிசாக வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2- ஆவது பரிசாக ரூ.2 ஆயிரம், 3- ஆவது பரிசாக ரூ.ஆயிரம் மதிப்புள்ள நூல்களும் கொடுக்கப்படும்.

இதுதவிர ஓவியப்போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. ஓவியப்போட்டி 10- ஆம்தேதி காலை 8 முதல் 10 மணிவரை புத்தக கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் நடக்க உள்ளது. 6 முதல் 16 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு வயதை பொறுத்து போட்டி பிரித்து நடத்தப்பட உள்ளது.

பரிசுகள் ரூ.2 ஆயிரம், 1,500, 1,000 மதிப்புள்ள நூல்கள் கொடுக்கப்படும்.

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா ஒரு அரங்கு அமைத்து பழைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு புதிய நோட்டுக்களை தர உள்ளது. மேலும் கள்ள ரூபாய்நோட்டை தெரிந்துகொள்வது குறித்த விளக்கமும் அங்கு அளிக்கப்பட இருக்கிறது.

புத்தக கண்காட்சியின் ழைவுக்கட்டணம் ரூ.5. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு இலவசம்.

பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 5 லட்சம் இலவச கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் 8 லட்சம் புத்தகங்கள் விற்பனையாயின. இந்த வருடம் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காணிப்பு கேமராக்களும் கண்காட்சி அரங்கில் பொருத்தப்பட உள்ளன.

17- ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது. அன்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் விருதுகள் வழங்க உள்ளது. புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து நூல்களுக்கும் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும்.
புத்தக கண்காட்சி தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

சனி, ஞாயிறு நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும்.
இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.

திங்கள், 2 ஜனவரி, 2012

அதிரையில் மின்தடை நேரங்கள் மாற்றம்!

அதிராம்பட்டினம் , பேராவூரணி நகர், கரந்தை, தஞ்சாவூர் வ.ஊ.சி., நகர், தஞ்சாவூர் ஸ்டேடியம், மதுக்கூர், தஞ்சாவூர் கீழவாசல், தஞ்சை கிரிட் மின் நிலையம் இண்டஸ்டிரியல், கரந்தை பூக்குளம் ஆகிய மின்பாதைகளில் மதியம் 12 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மின்தடை செய்யப்படும். என்று, தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தங்கராஜ் செய்தியாளர்களிடம் சொன்னார்.

தஞ்சை மாவட்ட ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள கலெக்டர் பாஸ்கரன்அழைப்பு!


தஞ்சை மாவட்டம்
கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விபரம்: 
தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை 2012 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அவ்வாறு புதுப்பிக்கும்போது புழக்கத்திலுள்ள ரேஷன் கார்டுகளில் ஆண்டு குறிப்பிடாமல் உள்ள உள்தாளின் மேற்பகுதியில் ""2012'' என முத்திரையிட அரசு உத்தரவிட்டுள்ளது. 

குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை ரேஷன் கார்டுகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம். எனவே, ரேஷன் கார்டுகளை முத்திரையிட்டு புதுப்பிக்கும் போது, அட்டைகளில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், நபர் சேர்த்தல், நீக்கம் காஸ் உருளை விபரம் ஆகிய விபரங்களை வாய்மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் ரேஷன் கார்டு தகவல் தொகுப்பை மேம்படுத்தவும், அதனைத் தொடர்ந்து இந்த விபரங்களை பின்னர் தல விசாரணை செய்து ரேஷன் கார்டுகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ரேஷன் கார்டுகளில் பதிவு செய்யும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கும் பணி ஜன.,மற்றும் பிப்., மாதங்களில் நடக்கிறது. எனவே, குடும்ப தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க, புதுப்பிக்க செல்லும் போது அங்காடி பணியாளர்களிடம் தேவையான விபரங்களை வாய்மொழியாக தெரிவித்தால் போதும். 

அந்த விவரங்கள் ரேஷன்கார்டு மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியில் வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியில் 2012ம் ஆண்டைய வழங்கல் பதிவேட்டில் கையெழுத்து, இடது கை பெருவிரல் ரேகை பதிக்க வேண்டும். 

இவ்வாறு கையெழுத்து இட்டால் அல்லது கைரேகை பதிந்தால் தான் ரேஷன் கார்டு புதுப்பிடீக்கும் பணி முடிவுற்றதாக கருதப்படும். ரேஷன் கார்டுகாரர்கள் நலன் கருதி சேகரிக்கப்படும் இந்த விபரங்களை ரேஷன் கடையில் பொருட்கள் பெற செல்லும் போது ரேஷன் கார்டுகாரர்கள் தாங்களே முன்வந்து கேட்கும் தகவலை தெரிவித்து, ரேஷன் கார்டை புதுப்பித்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

அதிரையில் எலி காய்ச்சல்!


அதிராம்பட்டினத்தில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் தற்போது நலமுடன் உள்ளனர். வேறு யாருக்கும் பாதிப்பு உள்ளதா என சுகா தார துறையினர் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் எலி காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக தெரியவந்ததை அடுத்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் மதிவா ணன் உத்தரவின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாம்பன், பூச்சியியல் வல்லுநர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழு அதிராம்பட்டினம் பகுதியில் முகாமிட்டு நேற்று முன்தினம் முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.




நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீர் இணைப்புக்குழாய் ஆகியவற்றை ஆய்வு செய்து தண்ணீரில் குளோரின் போடுகின்றனர். காய்ச்சி வடிகட்டிய தண்ணீ ரையே குடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாம் பன் கூறுகையில், Ôஅதிராம்பட்டினத்தில் எலி காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பெரியசாமி (35), சித்ரா (30) ஆகியோரின் ரத்த மாதிரியை எடுத்து கட ந்த 19ம் தேதி ஆய்வுக்கு தஞ்சை அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களு க்கு எலி காய்ச்சல் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட் டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் 7 நாள் சிகிச்சை க்கு பின் நலமாக உள்ள னர். மேலும், எலிக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக அதிராம்பட்டினத்தில் உள்ள 21 வார்டுகளிலும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று ஆய்வு மேற் கொ ண்டு வருகின்றனர் என்றார். 

புதன், 28 டிசம்பர், 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் என்ன செய்யும்?


சங்கம்  என்ன செய்யும்? 
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு வரும் வழக்குகளுள்  நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம்  கணவன்-மனைவி  சம்மந்தமான வழக்குகளாகவே வருகின்றன.  அவற்றுள்ளும் பல, ‘தலாக்’ அல்லது ‘ஃபசஹ்’ கேட்டுக் கணவனோ மனைவியோ தொடுக்கும் வழக்குகளாகவே இருக்கின்றன.  பெண் வீட்டாரின் தகுதிக்கு மேலான சீதனம் கேட்டு வரும் வழக்குகளும் இதில் அடங்கும்.  மாமியார், மாமனார், நாத்தனார், மற்றுமுள்ள உறவினர்கள் செய்யும் கொடுமைகளுக்கும் அளவில்லாத வகையில் வழக்குகள் வருகின்றன. 
இவற்றை இயலுமான வரையில் ஒற்றுமைப் படுத்துவதற்கே சங்க நிர்வாகம் பாடுபடுகின்றது.  அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாதபோது, ‘தலாக்’ அல்லது ‘ஃபசஹ்’ முறைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. 
அண்மையில் சங்கத்தின் முன் வந்த வழக்கு, சரியான மார்க்கத் தீர்ப்பின் அவசியத்தைத்  திரும்பிப் பார்க்க  வைத்துள்ளது.  நமதூரைச் சேர்ந்த, ஏற்கனவே ‘தலாக்’ பெற்ற விதவைப் பெண் ஒருவருக்குத் தஞ்சாவூரைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகித் ‘தலாக்’ பெற்ற மாப்பிள்ளையை ஆறு மாதங்களுக்கு முன் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் திருமணம் நடந்தது.  இப்போது, மாப்பிள்ளை, மாமனார் கொடுமை என்ற காரணத்தால், அப்பெண்ணும் அவரைச் சேர்ந்தவர்களும் சங்கத்துக்கு வராமல்,கம்யூனிஸ்ட் மாதர் அமைப்பைச் சேர்ந்த ஒருத்தியின் மூலம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மாப்பிள்ளை வீட்டாரிடம் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி, பத்து லட்சம் ரூபாய் தந்தால்தான் கேசை வாபஸ் வாங்குவோம்; இல்லாவிட்டால், வரதட்சணைக் கொடுமை என்ற காரணம் காட்டி ‘உள்ளே’ தள்ளிவிடுவோம் என்று மிரட்டியுள்ளார்கள். 
கட்டப்  பஞ்சாயத்து செய்து மிரட்டி மாப்பிள்ளையிடம் பணம் பிடுங்க நினைத்த கம்யூனிஸ்ட் மகளிர் அணித் தலைவி, மாப்பிள்ளை சார்பாக இருந்து செயல் பட்ட நமதூர்க்காரர் ஒருவருடன் போனில் தொடர்பு கொண்டு, இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் கீழ்த் தரமாகப் பேசியுள்ளார்.  இவ்வளவும் நடந்ததால், மாப்பிள்ளை வீட்டார் தாம் பணிந்து போவதில்லை என்று உறுதியாக நின்றுள்ளனர்.   
அதனை  அடுத்து, யாரென்று காட்டிக்கொள்ளாத  ஒருவர் மாப்பிள்ளை வீட்டாரைத் தொடர்பு  கொண்டு, ‘ஐந்து  லட்சத்துக்கு சம்மதித்தால் கேசை வாபஸ் வாங்கிவிடலாம்’ என்று பேரம்  பேசியுள்ளனர்.  அதற்கும் மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லை.

இந்த  நிலையில்தான், தஞ்சாவூர் மாப்பிள்ளை வீட்டார் சங்கத்துக்கு மனு எழுதிக்கொண்டு வந்தார்கள்.  மனுவைப் பரிசீலித்தபோது, அதுவரை பெண் வீட்டார் சங்கத்துக்குத் தமது சார்பிலான எந்த விண்ணப்பமும் கொண்டுவராமல் இருப்பதால், மாப்பிள்ளை வீட்டாரைத் தாமதிக்கக் கேட்டுக்கொண்டோம். 
இதற்கிடையில், காவல் நிலையத்தில் வைத்து, மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒரு லட்சம் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்று பேசி ஒப்பந்தம் எழுதி முடித்துப் பணமும் கை மாறிவிட்டதாம்.  மாப்பிள்ளை வீட்டார் ‘தலாக்’ சொல்வதில் முடிவாக நின்றதால், அதனை நேரில் உறுதிப் படுத்துவதற்காக, அவர்களை சங்கத்தின் ஆலிம் அழைத்திருந்தார்.  மாப்பிள்ளை ‘முத்தலாக்’ என்று கூறியதால், ‘ஷரீஅத்’படித் ‘தலாக்’ உண்டாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.  
இதன்  பிறகு பெண்ணும் பெண்ணைச் சேர்ந்தவர்களும்  அந்த மாப்பிள்ளையுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்தனர்!  அதற்குக் காலம் கடந்துவிட்டது.  அது மட்டுமல்லாமல், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் யாருக்கும் தெரியாமல், பெண்கள் தன்னிச்சையாக எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்!  பெண் வீட்டுத் தரப்பில் பல முரண்பாடுகள் நடந்துள்ளதால், இந்தப் பெண்ணும் மாப்பிள்ளையும் இனிச் சேர்ந்து வாழ சாத்தியமே இல்லை என்று சங்கம் முடிவு செய்தது. 
தீர்ப்பளிக்க  சங்கம் என்ற ஒன்று  இருக்கும்போது, வேறு பிற அடாவடித் தனத்தில் இறங்க  நினைப்பவர்களுக்கு  இது ஒரு பாடமாகும்.  ‘சங்கம் என்ன செய்யும்?’ என்று சர்வ சாதாரணமாகக் கேட்டுவிடுபவர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.  

அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு!

அன்பிற்குரிய அதிரைச் சகோதரர்களுக்கு:  

அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்ற ஜனவரி 2011 - 14,15 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றிய விவரங்களையும் அதன் காணொளிகளையும் கண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.  முதல் மாநாடாக இருந்ததால், அதனைக் குறுகிய வட்டத்திற்குள்தான் சகோதரர்களை ஈடுபடுத்தி, அல்லாஹ் உதவியால், வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.  அல்ஹம்து லில்லாஹ்!

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் புத்தாண்டில் இரண்டாவது மாநாட்டைச் சற்று விரிவாகவும், அதிகமான சகோதரர்களின் பங்களிப்பிலும், பயனுள்ள பல நிகழ்ச்சிகளுடனும் நடத்தத் தீர்மானித்துள்ளோம்.  அது பற்றிய ‘மஷ்வரா’ விரைவில் தொடங்கவுள்ளது.  எனவே, பங்களிப்புச் செய்ய ஆர்வமுள்ள அதிரையின் அன்புச் சகோதரர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை "ADIRAI EDUCATIONAL MISSION" என்ற மின்னஞ்சல் குழுமத்தில் இணைத்துக்கொண்டு உங்களின் அரிய / உரிய பங்களிப்புகளை வழங்குமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு கூகுள் குழுமம் இதோ : adirai-edu-mission@googlegroups.com

உங்கள் புரிந்துணர்வுக்கும் அன்பாதரவுக்கும் மிக்க நன்றி.  வஸ்ஸலாம்.

அன்புடன்,

அதிரை அஹ்மது
+91 98 94 98 92 30

சனி, 24 டிசம்பர், 2011

மீன் எண்ணெய் ரத்த புற்று நோயை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல்!


மீன் எண்ணெய் ரத்த புற்று நோயை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல்
மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என இந்திய ஆராய்ச்சியாளர் சந்தீப் பிரபு கூறுயுள்ளார்.
 
மீன்களில் உள்ள ஒமேகா-3 என்னும் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் டெல்டா-12-ப்ரோடாக்லாண்டின் ஜே3 அல்லது டி12-பிஜிஜே3 என்ற சேர்மம் ரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
 
இந்த ஆராய்ச்சியில் ரத்த புற்றுநோய் உள்ள எலிகளுக்கு 7 நாட்கள் இந்த சேர்மம் கொடுக்கப்பட்டது. பின்னர் பரிசோதித்தபோது அந்த எலிகள் அனைத்தும் குண்மடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

குடும்ப அட்டைகள் கால அவகாசம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு!

தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் கால அவகாசத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க காலதாமதம் ஆகும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் 31.12.2011 அன்றுடன் முடிவடைகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பல இடங்களில் குடும்ப அட்டையில் தன் பெயரை பதிவு செய்திருந்தால், அதனைக் கண்டுபிடிக்க வழிவகைகள் இல்லை. இதன் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளில் ஒரே நபரின் பெயர் இடம் பெற்றுள்ள நிலையும், போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்ற நிலையும் உள்ளது.

உடற்கூறு பதிவு முறை

இத்தகைய குறைபாடுகளைக் களைய, தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, உடற்கூறு பதிவு முறையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண்ணின் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்து, பிரத்தியேக அடையாள அட்டை வழங்குவதற்கான கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

இந்த உடற்கூறு முறையிலான கணக்கெடுப்பு முடிந்தவுடன், மேற்படி தகவல் தொகுப்பைப் பயன்படுத்தி, மின்னணு குடும்ப அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தொகுப்பு முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால், ஒரே நபர் பல குடும்ப அட்டைகளில் தன் பெயரை பதிவு செய்வதும், போலி குடும்ப அட்டைகளும், நியாயவிலைக் கடைகளில் போலி பட்டியலிடுவதும் களையப்படும்.

மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு

தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு சில காலம் ஆகும் என்ற காரணத்தினால், தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு, அதாவது 31.12.2012 வரை நீட்டிக்க ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சாமிக்கு கைது வாரண்டு!


பண மோசடி வழக்கில்
சுப்பிரமணிய சாமிக்கு கைது வாரண்டு
நுகர்வோர் ஆணையம் நடவடிக்கை
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு எதிராக வி.என்.நாராயணன் என்பவர் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், கடந்த 1986-ம் ஆண்டு சுப்பிரமணிய சாமி தலைவராக இருந்த ஒரு கம்பெனியில், 3 ஆண்டு டெபாசிட் திட்டத்தில், ரூ.10 ஆயிரம் முதலீடு செய்ததாகவும், ஆனால் அப்பணத்தை சுப்பிரமணியசாமி திருப்பித்தரவில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.
 
இதை விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் பத்மினி சதீஷ், ரூ.10 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்பி தருமாறு சுப்பிரமணிய சாமிக்கு ஏற்கனவே உத்தரவிட்டார்.
 
ஆனால், பணத்தை சுப்பிரமணிய சாமி தரவில்லை என்று நாராயணன் மீண்டும் புகார் கூறினார். இதனால், சுப்பிரமணிய சாமிக்கு எதிராக ஜாமீனில் விடக்கூடிய கைது வாரண்டை நுகர்வோர் ஆணையம் பிறப்பித்துள்ளது. அவரை கைது செய்து, ஏப்ரல் 2-ந் தேதிக்கு முன்பு, நுகர்வோர் ஆணையத்தில் ஆஜர்படுத்துமாறு டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

வெள்ளி, 23 டிசம்பர், 2011

சிறுபான்மையினருக்கு உள் இட ஒதுக்கீடு!


சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதென மத்திய அரசு வியாழக்கிழமை இரவு ஒருமனதாக முடிவுசெய்துள்ளது.
 இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 4.5 சதவீதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்படும். பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது. இதன்மூலம், 1992-ம் ஆண்டு சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டத்தின் பிரிவு 2 (சி)யில் கூறியுள்ளபடி, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு சலுகை கிடைக்க வழியேற்பட்டுள்ளது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெüத்தர்கள், பார்சிகள் ஆகியோரை சிறுபான்மையினர் என்று மேற்கண்ட சட்டப் பிரிவு கூறுகிறது.
 ஒர் அரசு உத்தரவு மூலம் உள் ஒதுக்கீடு குறித்த அறிவிக்கை வெளியிடப்படும்.

வியாழன், 22 டிசம்பர், 2011

"இஸ்லாமிய இலக்கியக் காவலர்' மு.செய்யது முஹம்மது ஹசன்!


தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் வழியில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அழியாது காத்துப் பதிப்பித்தவர்; சிறுகதை எழுத்தாளர், சரித்திர நாவலாசிரியர், பத்திரிகை நிர்வாக ஆசிரியர், பதிப்பாசிரியர் எனப் பன்முகத் தன்மைகொண்டவர் மு.செய்யது முஹம்மது ஹசன்.


நாகப்பட்டினத்தில், 1918-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முஹம்மது சாலிஹ் சாஹிபுக்கும், ஜுலைகா பீவிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.
நாகப்பட்டினம் தென்னிந்திய திருச்சபை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். தந்தையிடமும் தாத்தாவிடமும் அரபி, உருது, பார்ஸி ஆகிய மொழிகளைக் கற்றார். இவர் மேற்படிப்புப் படிக்க விரும்பினார். 



ஆனால், பாட்டன் விரும்பியபடி தன் தந்தையுடன் 1935-இல் பர்மாவுக்குச் சென்று, "மாந்தலே' என்ற ஊரில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். அங்கே பர்மிய மொழியைக் கற்றார். 1937-இல் தாயகம் திரும்பினார். 1938-இல் "இந்திய தபால் தந்தித் துறை'யில் தந்திப் பிரிவில் அமைச்சகப்பணி எழுத்தாளராகச் சேர்ந்து கண்காணிப்பாளராய் உயர்ந்து, 38 ஆண்டுகள் பணியாற்றினார்.


கல்கியின் நூல்களைப் படித்து, அதன் மூலம் ஏற்பட்ட தாக்கத்தால், 1941-இல் எழுதத் தொடங்கினார். பணியிலிருந்த காலத்திலேயே கலைமகள், பிரசண்ட விகடன், சந்திரோதயம், ராஷ்டிரவாணி, மணிவிளக்கு, முஸ்லீம் முரசு முதலிய இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். "சாபு' என்ற புனைபெயரில் வள்ளி, வளையல்கள், இரு சித்திரங்கள்; "ஜமீல்' என்ற பெயரில், என் ஹலீமா, படிப்பும் பரம்பரையும்; "ஹசன்' என்ற பெயரில், வீரத்தின் பரிசு முதலிய சிறுகதைகளை எழுதினார். 1942-இல் சென்னை அல்லயன்ஸ் பிரசுரம் வெளியிட்ட "பிரபலங்களின் சிறுகதைத் தொகுப்பில்' இவரது சிறுகதையும் இடம்பெற்றது.


சிறுகதைகள் எழுதிவந்த ஹசனின் கவனம், பின் சரித்திர நாவல்கள் எழுதுவதில் திரும்பியது. மஹ்ஜபீன், சிந்துநதிக் கரையினிலே, புனித பூமியிலே, சொர்க்கத்து கன்னிகை, நீலவானம் ஆகிய ஐந்து சரித்திர நாவல்களை எழுதியுள்ளார்.


1956-இல் "மஹ்ஜபீன்' நாவல் வெளிவந்தது. சிந்துநதிக் கரையினிலே 1971-இல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசைப் பெற்றது. சீதக்காதி அறக்கட்டளையின் "செய்கு சதக்கத்துல்லா அப்பா' இலக்கியப் பரிசையும், கம்பன் கழகத்தின் கி.வா.ஜ. நினைவுப் பரிசையும் வென்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளில் முஹம்மது ஹசனுக்குப் பொற்கிழி வழங்கி, "இஸ்லாமிய இலக்கியக் காவலர்' என்ற பட்டமும் கொடுத்தனர். மஹ்ஜபீன், சிந்துநதிக் கரையினிலே ஆகிய இரு நாவல்கள் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் எழுதிய சிந்துநதிக் கரையினிலே, புனித பூமியிலே, மேற்கு வானம் ஆகிய மூன்று நாவல்களையும் மூன்று பேராசிரியர்கள் ஆய்வு செய்து, "ஆய்வியல் நிறைஞர்' (எம்.பிஃல்) பட்டமும், "ஹசனின் வரலாற்று நாவல்கள் ஓர் ஆய்வு' என்ற தலைப்பில், பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்து "முனைவர்' (பிஎச்.டி) பட்டமும் பெற்றுள்ளனர்.


1966 லிருந்து 1980 வரை "முஸ்லீம் முரசு' மாத இதழில், முதலில் நிர்வாக ஆசிரியராக இருந்தார். பின்னர் அவ்விதழின் முழு பொறுப்பையும் ஏற்று சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். மணிவிளக்கு, பிறை, உரிமைக்குரல் ஆகிய மாத இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்று அரிய ஆலோசனைகள் வழங்கினார்.


17, 18-ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட எண்ணற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள், 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் மறைந்துவிட்டன - கிடைக்கவில்லை. அவைகளைத் தம் கடின உழைப்பால் தேடிப் பிடித்து, துண்டு துண்டாகக் கிடந்தவற்றை ஒன்றாய் இணைத்துப் பதிப்பித்தார். ஆயிரம் மஸாலா, மிஹ்ராஜ் மாலை, சீறாப்புராணம், சின்னச் சீறா, திருமணக் காட்சி, கனகாபிஷேக மாலை, திருமண மாலை முதலிய காப்பியங்களையும், 20 சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்துள்ளார்.


தமிழக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.


எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், இலக்கியக் காவலர் எனப் பன்முகத் தன்மையோடு பளிச்சிட்ட மு.செய்யது முஹம்மது ஹசன், 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி காலமானார். அவரது மறைவு, இஸ்லாமிய இலக்கியத் துறையை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.


முஹம்மது ஹசனுக்கு மூன்று ஆண், மூன்று பெண் குழந்தைகள். அவர்களுள் ஒருவர்கூட எழுத்துத் துறையில் ஏற்றம் பெறவில்லை என்றாலும், அவரிடம் பயிற்சிபெற்ற பலர், எழுத்துலகில் இன்றைக்கும் பரிணமிக்கின்றனர் - பிரகாசிக்கின்றனர் என்பதுதான் ஹசனின் படைப்பிலக்கியத் திறனுக்குச் சான்று!
மு.அ.அபுல் அமீன்
நன்றி: தினமணி

CM.தாஜுதீன் மகன் திருமணம்: செக்கடிப்பள்ளியில் நடைபெறுகிறது!


CM.தாஜுதீன் மகன் CMT.முபாரக் திருமணம் 26-12-11 திங்கள்கிழமை காலை 7மணிக்கு வரவேற்பும் 8மணிக்கு நிக்காஹும் செக்கடிப்பள்ளியில், நடைபெற உள்ளது. மணமக்களின் நல்வாழ்விற்கு துஆ செய்வோமாக!

வெள்ளி, 9 டிசம்பர், 2011

சுப்பிரமணிய சாமியை ஹாவர்ட் பல்கலைக்கழகம் நீக்கியது! மாணவர்களின் கையெழுத்து போராட்டம் வெற்றி!!


Subramanian Swamyஇந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.

கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.

சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையும் வைத்தனர்.

இந் நிலையில், பிற மதங்களை புண்படுத்தும் வகையில் எழுதியதற்காக, ஹாவர்ட் பல்கலைக்கழகம், சாமி நடத்தி வரும் பாடங்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் கோடை விடுமுறை கால பள்ளியில், சம்மர் ஸ்கூலில் ‘Quantitative Methods in Economics and Business’ மற்றும் ‘Economic Development in India and East Asia’ ஆகிய தலைப்புகளில் பாடம் எடுப்பார் சாமி.

இந் நிலையில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்விப் பிரிவுக்கான (இதன் கீழ் தான் பொருளாதாரத்துறையும் வருகிறது) 2012ம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தை முடிவு செய்ய இந்த ஆசியர்களின் கூட்டம் நேற்று நடந்தது.

அப்போது, இந்தப் பிரிவில் பணியாற்றும் பல்வேறு மதங்கள், இனங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் சாமியின் இஸ்லாம் பற்றிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சாமி பாடம் நடத்தவும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

மதங்கள் ஒப்பீட்டுத் துறையின் பேராசிரியரான டயானா எக் பேசுகையில், சாமி இங்கு பாடம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்ற தனது எதிர்ப்பை முதலில் கிளப்பினார். அவர் கூறுகையில், மதங்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு சுயலாபம் தேட முயல்கிறார் சாமி. மதக்கலரங்களை தூண்டிவிடும் ஒருவருடன், சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத துவேஷத்தை பரப்பித் திரியும் ஒருவருடன் ஹாவர்ட் போன்ற ஒரு சர்வதேச கல்வி மையம் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றார்.

அதே போல தத்துவவியல் துறை பேராசியர் சீன் கெல்லி கூறுகையில், நான் கூட முதலில் சாமியை ஆதரித்தேன். ஆனால், அவர் என்ன எழுதினார் என்பதை முழுமையாக பார்த்த பிறகு அதை ஏற்க முடியவில்லை. கருத்து சுதந்திரம் என்று கூறிக் கொண்டு இரு மதத்தினர் இடையே வன்முறையை தூண்டிவிடுவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கத்தல்ல. இது கருத்து சுதந்திரமல்ல, மதக் கலவரத்தை தூண்டிவிட தரப்படும் சுதந்திரம் என்றார்.

வரலாற்றுத்துறை பேராசிரியர் சுகதா போஸ் கூறுகையில், ஐரோப்பிய நாடுகளை வம்சாவளியாகக் கொண்ட அமெரிக்கர்கள் தான் உயர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளாத யூத இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது என்பது மாதிரி இருக்கிறது சுப்பிரமணிய சாமியின் கருத்து என்றார்.

இவ்வாறு நடந்த காரசார விவாதத்துக்குப் பின் சாமிக்கு 'குட்பை' சொல்ல ஹாவர்ட் பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

இதே பல்கலைக்கழகத்தில் தான் 1965ம் ஆண்டு பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் சாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதன், 30 நவம்பர், 2011

இதுவரை கண்டிராத கோணத்தில் அரிய புகைப்படங்கள்!


கோடிக்கணக்கான விலங்குகளைக் கொண்ட இப் பூமியில் நாம் பார்த்துள்ளவை எண்ணிக்கையில் மிகமிகக் குறைவு.  அவற்றில் சில நாம் நினைப்பதனை விடவும் அழகானவை. சில அழகானவற்றை நாம் கண்டது கூட இல்லை. 


ரஷ்ய ஆர்க்டிக் கடலடியில் வாழும் விசித்திர உயிரினங்கள்







உலகின் மிகப் பெரிய குகையான ஹாங் சொன் டொங்கின் மிரட்டலான உட்பக்கம்


'ஹாங் சொன் டொங்' என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும். 
இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படுகின்றது. 


வியட்நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகையானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 

இக்குகையின் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 


எனினும் குகையினுள்ள இருந்து வெளியாகிய மிரட்டலான மர்ம ஒலியால் அவர் அதனுள் நுழைய முயவில்லை. அந்த மர்ம ஒலிக்கான காரணம் அதனுள் பாயும் ஆற்று நீரின் சத்தம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்தைத் தொடர்ந்தே இது தொடர்பில் வெளியுலகிற்கு தெரியவந்தது.




இதன் நீளம் 2.5 மைல்கள் உயரம் 800 அடி என்பதுடன் அகலம் 300 அடியெனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இக்குகையின் உள்ளேயே காடு அமைந்திருப்பது இதன் விசாலத்திற்கு ஓர் உதாரணம்.

மேலும் சுமார் 150 குகைகள் இப் பிரதான குகையோடு இணைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இக் குகையானது 2 முதல் 5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.




___

Blog Archive