Breaking News
recent

ரிட்டன் விசா 9

(வாசகர்கர்களே இப்ப கதை ஆசிரியருக்கு உடம்பு தேறி வருகிறது அதனால் எழுத தொடங்கி விட்டார்).
என்ன தம்பி இவ்வளவு தறீங்க,
நான் உதவியாதானே செஞ்சேன்!அதுக்கு போயி இவ்வளவு தந்து நம்மள வேத்தான் சாதியாகிடியல!-இஸ்மாயில் நானா.
தப்பா எடுத்துகிடியல நான! இந்த காலத்துல நமகென்ன வம்புன்னு போறச்ச நீங்க செஞ்ச காரியத்துக்கு அல்லாஹ் நல்ல கூலியத்தருவான்.
ஆனாகா,உங்க பொளப்ப உட்டுட்டு மெனக்கெடிருக்கிங்க உங்கள் மதிசித்தான் இதத்தறேன். சும்மா ஹதியா தரலேயே,
தயவு செஞ்சு இத ஏத்துக்குங்க.அப்பத்தான் மனசு கேக்கும் ஆமா!சரிதம்பி நா தப்பா எடுத்துக்கல!
ஆனா உங்களுக்கு பசிச்சிச்னா ஏதாவது ஆர்டர் பண்னுங்க!எனக்கு டீயும்,ரெண்டு வடயும் போதும்.இல்ல நான நானும் அப்பாஸும் சாப்ட்டுத்தான் வந்தோம்,பாவ நீங்கதான் கொலப்பட்டிணி கிடகீய அதான்! நமளுக்கு பளகிடுச்சி தம்பி.(எல்லாருக்கும் டீயும், நானாஉக்கு 3 வடயும் ஆர்டர் செஞ்சான் கபூர்-பின் டீ,வட சாப்பிட்ட பொறவு).
அப்பாஸ் நீ நானஒடப் போ. நான் ஜமாலுக்குத்தொனையா தங்குறேன். வீட்டல எல்லார்டையும் விசயத்தை சொல்லிடு பிரச்சன இல்லேன்னு சொல்லு.சரிபா பயந்துடும்,பயப்படுர மாறி எதுவும் இல்லேன்னு சொல்லு.அப்ப கெளம்புங்க! நா வறேன் தம்பி கவலப்படாதிய நல்லவொல அல்லா கைவிட மாட்டான். சரி நான பாத்துப்போங்க! காக்கா நானும் கூட இருக்கேனே!ஏதாச்சம் உதவியா இருக்கும்ல! இல்ல அப்பாஸ் உட்ல உள்ளவங்களுக்கு நீபோனத்தான் ஆறுதலா இருக்கும்.சரி காகா அப்ப நா வறேன். வண்டிய உள்ள ப்போட முடியுமானு பாக்குறேன். இல்லாட்டி எதுத்தாப்ல போட வேண்டியதுதான். நேரமாவுதுப்போங்க!அப்ப வறென் தம்பி.போய் காலைய்ல போன்போடுங்க.சரி நானா.
(அப்பாஸும், நானாவும் கிளம்புகிறாங்க,கபூர் ஆஸ்பத்திரியை நோக்கிப்போறான்).
(தொடரும்)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.