Breaking News
recent

பெயர்தாங்கிய முஸ்லிம் நாம்.

வணக்கத்துக் குறிவன் அல்லாஹ்வே,
இதுதான் இஸ்லாம்!
நாமோ அடக்கஸ்தலம் சென்று,
அங்கே அடங்கி கிடப்பவரிடம் அடைக்கலம் தேடுகின்றோம்.
ஒடுக்கத்து புதன், இன்னும் சில நல்ல நாள்-
பெரிய நாள்ளென்று-
நாட்களையும், நேரங்களையும் உயர்தியும்,தாழ்த்தியும் நாமே வகுக்கின்றோம்.
மஹருக்கு மணம்முடிக்க மார்க்கம் சொல்லியதில்,
மஹருக்கு மாறாக தட்சனை கோருகின்றோம்.
வல்லவன் அல்லாஹ்,
சொல்லாதை செய்வதற்கு அனுமதி தந்ததுயார்?
இஸ்லாம் சொல்லாத,
கட்டுக்கதை சொல்லும் மொவுலத்தெனும் முஸீபத்தை ஓதச்சொன்னது யார்?
என்று இப்பழக்கங்கள் நம்மைவிட்டு போகிறதோ-
அன்றே சொல்லுங்கள் நாங்கள் முஸ்லிம் தானென்று!-
அதுவரை நாம் யாவருமே ,
பெயரலவில் முஸ்லிம் தானே?
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.