சுனாமி நினைவு தினத்தில் கீழக்கரையில் கடல் 300 அடி உள்வாங்கியது
பொதுமக்கள் பீதி
கீழக்கரை,டிச.27-
கீழக்கரையில் சுனாமி நினைவு தினமான நேற்று கடல் திடீரென்று 300 அடி தூரம் உள்வாங்கியதால் மீனவர்கள் பீதியடைந்தனர்.
நிறமாற்றம்
வங்க கடலில் நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் தொடர்ச்சியாக மழைபெய்தது. ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் பகுதிகளில் கடல்கொந்தளிப்பு ஏற்பட்டது. கடந்த 18-ந்தேதி தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடல்பகுதியில் கடல் நீரின் நிறம் சிவப்பாக மாறியது. இந்த மாற்றம் காணப்பட்டது.
கடலில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தை கண்ட மீனவர்களும், பொதுமக்களும் பீதி அடைந்தனர். கடற்கரையில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். சில மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கீழக்கரையில் கடல் நிறமாறிய நிலையில் அதன் அருகே உள்ள ஏர்வாடி கடலில் தண்ணீர் எந்தவிதமாற்றமும் ஏற்படவில்லை. கடல் அமைதியாக காட்சி அளித்தது.
கடல் உள்வாங்கியது
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை சுனாமி பேரலை தாக்கிய டிசம்பர் 26-ந்தேதியான நேற்று மாலை அமைதிகடலான கீழக்கரை கடல்பகுதி திடீரென உள்வாங்கியது. அங்குள்ள மீன்பிடி ஜெட்டி அருகே சுமார் 300 அடிதூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடற்கரையில் தண்ணீரில்மூழ்கி இருந்த பாறைகள்,பாசிகள் வெளியே தெரிந்தன. கரை அருகே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்த சிறிய வத்தைகள்,நாட்டுபடகுகள் தரைதட்டி நின்றன.
இதைகண்ட பொதுமக்கள், மீனவர்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கண்டு பீதி அடைந்தனர். உடனே அவர்கள் கடற்கரைபகுதியை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். சுனாமி தினத்தில் கடல் உள்வாங்கியதால் கீழக்கரை பகுதி முழுவதும் நேற்று மாலை பரபரப்பாக காணப்பட்டது.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்