Breaking News
recent

மும்பை தாக்குதல் சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும்

மும்பை தாக்குதல் சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும்
த.மு.மு.க. மாநில தலைவர் பேட்டி


ராமநாதபுரம்,டிச.28-

மும்பை தாக்குதல் சம்பவத்தில் தீவிர விசா ரணை நடத்த வேண்டும் என்று த.மு.மு.க. மாநில தலைவர் கூறினார்.

த.மு.மு.க. மாநில தலைவர்

தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா ராமநாத புரத்தில் நிருபர்களுக்குபேட்டி யளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது- ராமநாத புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன் தொடர்ந்து சிறு பான்மை யினருக்கு எதிராக செயல் பட்டு வருகிறார். எனவே அவரை வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்ய வேண் டும்.

இந்த கோரிக்கையைமுன் வைத்து தமிழக அரசை வலியுறுத்தி அடுத்தமாதம் (ஜனவரி) 10-ந்தேதி ராமநாத புரத்தில் மாநில த.மு.மு.க. பொது செயலாளரும், தமிழக வக்பு வாரிய தலைவருமான ஹைதர் அலி தலைமையில் த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படும்.

வழக்கு

சில மாதங்களுக்கு முன்பு பரமக்குடியில் ராஜா மஸ்தான் என்ற பள்ளி மாணவனின் மர்ம சாவு குறித்து த.மு.மு.க. உள்பட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சந்தேகம் எழுப் பிய போதும் போலீசார் தரப்பில் கொலையாளிகளை காப்பாற்ற முயற்சித்ததால் நாங்கள் கோர்ட்டைஅணு கினோம். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப் பட்டது.

இந்த சம்பவத்தில் இருந்து சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வரும் போலீசார், கடந்த டிசம்பர் 6-ந்தேதி ராமநாதபுரத்தில் மட்டும் த.மு.மு.க.மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இடமாற்ற கோரிக்கை

இதேபோல கடந்த வாரம் வேதாளை கிராமத்தில்ஒரு பள்ளி மாணவிகிண்டல் செய்யப்பட்ட விவகாரத்தில் ரியாத் என்ற சிறு வன்ஒரு கும்பலால் கடத்தப்பட்டு சித்ரவதைசெய்யப்பட்டான். அந்தகும்பலை சேர்ந்தவர் களை தட்டிக்கேட்டத.மு. மு.க. வினரையும்தாக்கி உள்ள னர். இதுபோன்று தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகவே செயல்பட்டுவரு கிறார்கள். இது சமூக அமைதியை கெடுத்துமோத லுக்கு வழிவகுத்துவிடும். எனவே போலீஸ் சூப்பி ரண்டை தமிழகஅரசு மாறு தல் செய்ய வேண்டும்.

மாநாடு

வருகிற பிப்ரவரி மாதம் 7-ந்தேதி த.மு.மு.க. ஆதர வுடன் மனித நேய மக்கள் கட்சி தொடக்க விழா மாநாடு சென்னை பல்லாவரத்தில் நடக்க உள்ளது. இந்தகட்சி யின் சார்பில் வரும்பாரா ளுமன்ற தேர்தலில் போட்டி யிடுவோம். யாருடன் கூட் டணி? எத்தனை இடத்தில் போட்டி என்பதை மாநாட் டில் தெரிவிப்போம்.

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை 6 சதவீத மாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசைகேட்டுக் கொள்கிறோம். காங்கிரஸ் அரசுசிறுபான்மை யினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும், அதில் முஸ்லிம்களுக்குஉள் ஒதுக்கீடாக10சதவீதமும் வழங்க வேண்டும். தேர்த லுக்குள் இந்த கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் நாங் கள் அந்த கூட்டணியில் இருந்து விலக தயங்க மாட் டோம்.

குண்டு வெடிப்பு

இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா- ஈரானி டையே சீரான உறவு மேம் பட்டு வந்த நிலையில் மும் பை தாக்குதல் நடத்தப் பட்டு உள்ளது. இதை நடத் தியவர்கள் பாகிஸ்தான் தீவிர வாதிகளாக இருந்தாலும் அதை ஏவி விட்டவர்கள் யார் என்பதை முழுமையான விசாரணை நடத்திகண்டு பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது த.மு.மு.க. மாவட்ட செய லாளர் தஸ்பீக் அலி, ஒன்றிய செயலாளர் ருகைபு, நகர் தலைவர் சுல்தான், கீழக்கரை நகர் தலைவர் சிராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.