டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: தொண்டியில் வழிகாட்டல் முகாம்
திருவாடானை, டிச. 28: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), தேவேந்திர குல மள்ளர் உறவின்முறை சங்கம் ஆகியவை சார்பில், டி.என்.பி.எஸ்.சி. முதல் மற்றும் இரண்டாம் நிலைக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதற்கான வழிகாட்டல் முகாம் தொண்டியில் நடைபெற்றது.
தொண்டி பேரூராட்சி வணிக வாளகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. தலைவர் எம்.சாதிக் பாட்ஷா, தொண்டி பேரூராட்சி துணைத் தலைவர் சௌந்திரபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் த.மு.மு.க. மாணவர் அணி நிர்வாகிகள் பாதுஷா, சிப்ரி, நவர், ஆசிக், அகமது பாய்ஸ், தேவேந்திர குல மள்ளர் சங்கத் தலைவர் பீட்டர், நேரு, ஜெயக்குமார் ராஜா, தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஆசிரியர்கள் முருகேசன், மாலா, ஜான் பிரிட்டோ, சேவியர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
AdiraiPost
தேர்வு
தொண்டி
வழிகாட்டல் முகாம்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: தொண்டியில் வழிகாட்டல் முகாம்
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்