Breaking News
recent

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழைக்கு பலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு


கீழக்கரை,டிச.13-

ராமநாதபுரம் மாவட்டத் தில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரண மாக பலியானோர் எண் ணிக்கை 7 ஆக உயர்ந் துள்ளது.

மழை

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்தது. மழை காரணமாக மின் வயர்கள் அறுந்து விழுந் ததில் கீழக்கரையை சேர்ந்த பெண் ஒருவரும், திருவா டானை அருகே ஆடாங் கொட்டானை சேர்ந்த பெண் ஒருவரும் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.

சக்கரக்கோட்டையில் சுவர் இடிந்து விழுந்ததில் சோனை முத்து என்ற வாலிபர் இறந்து போனார். இதேபோல தொண்டியில் படகை பாது காப்பாக நிறுத்த சென்ற கர்ண மகாராஜா என்ற மீனவரும், குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இந்திரா என்ற பெண்ணும், சுவர் இடிந்து விழுந்து மீனாள் என்ற பெண்ணும் பலியா னார்கள்.

பெண் பலி

இந்த நிலையில் திருப்புல் லாணி அருகே குதக் கோட்டை ஊராட்சி கொட் டியக்காரன் வலசை கிரா மத்தை சேர்ந்தவர் யாக்கூப். இவரது மனைவி கதீஜா பீவி (வயது60). இவர் நேற்று மாலை தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மழை காரணமாக அதிக ஈரப்பதத்துடன் இருந்த வீட்டின் சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது.

இதில் இடிபாடில் சிக்கி கதீஜா பீவி படுகாயம் அடைந் தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ராமநாத புரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ராமநாதபுரம் தாசில் தார் இந்திரஜித் மற்றும் வரு வாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

1 கருத்து:

  1. LOG INTO THE BLOG BELOW:

    http://www.veeran.co.cc/2008/12/blog-post_12.html

    IN THERE

    கீழ்கண்ட வலைபதிவுகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிடுவதாக நண்பர் சீரா குறிப்பிடுகிறார்.

    http://www.blogger.com/profile/07064646591539842291

    http://satyamarkam.com/

    the hindutvas are slandering muslim bloggers

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.