Breaking News
recent

ஆசிரியர் அடித்ததால் சிறுவன் மூளை செயலிழப்பு

ஆசிரியர் அடித்ததால் சிறுவன் மூளை செயலிழப்பு

ஓமலூர், டிச. 23: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டியில் பள்ளிக்குச் சென்ற சிறுவன் தலையில் அபபள்ளி ஆசிரியர் அடித்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக மூளை செயலிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு மாணவன் பயிலும் தனியார் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன். அவரது மனைவி கீதா (32). வரதட்சிணை பிரச்னையால் இருவரும் பிரிந்துவிட்டனர். இப்புகாரை அடுத்து தண்டனை விதிக்கப்பட்டு இளங்கோவன் தற்போது சிறையில் உள்ளார்.

5 ஆண்டுகளாக தந்தையுடன் வசித்து வரும் கீதாவின் மகன் நாஞ்சில் வளவன் (8) கிராமத்திலுள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

"பள்ளிக் கட்டணத்தை செலுத்தாததால், அடிக்கிறார்கள். அதனால் வகுப்புக்குச் செல்ல மாட்டேன்' என நாஞ்சில் வளவன் அடம் பிடித்தானாம். அவனை சமாதானம் செய்து பள்ளிக்கு திங்கள்கிழமை அழைத்துச் சென்று கட்டணத்தை செலுத்தியுள்ளார் கீதா.

கீதா வீட்டுக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் வளவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அடிபட்டு விட்டதாகவும், தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. சிறுவன் வளவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். செவ்வாய்க்கிழமை அவனது மூளை செயலிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.

இந்நிலையில் கீதா, அவரது தந்தை ராமன் உள்ளிட்ட உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

ஆசிரியர் அடித்ததால்தான் வளவன் காயமடைந்தான். அதனால் குறிப்பிட்ட ஆசிரியர், பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மேட்டூர் சார்-ஆட்சியர் லட்சுமி பிரியா விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.