Breaking News
recent

காஷ்மீர் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்!

காலத்தின் கண்ணாடியாக காஷ்மீர் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இன்றைய அரசியல் வானில் மிகக் குறுகிய காலத்தில் புகழ் பெற்ற முஃப்தி முஹம்மது சயீதின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் அவர்களுடன் ஆட்சி அதிகா ரத்தை கூட்டாக பரிமாறிக் கொண்ட குலாம் நபி ஆஸாத்தை முதல்வராக்கிய காங்கிரஸும் முன்பு அடைந்த வெற்றியை அடைய முடியவில்லை.. ஆனால் சில காலம் அரசியல் தோல்விகளை அனுபவித்த காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாவின் மகன் ஃபரூக் அப்துல்லா அவரது மகன் உமர் அப்துல்லா என அப்துல்லாக்களின் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி 28 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத் திருக்கிறது. தேசியக் கட்சியாகவும் மதசார்பற்ற கட்சியாகவும் தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்திருக்கிறது. உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்? என தோப்புக் கரணம் போட வேண்டிய நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சியும், காங்கிரசும் சரிவை சந்தித்திருக்கிறது.


ஆனால் கடந்த காலங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட தேசிய மாநாடு கட்சி வெற்றியைக் குவித்திருக்கிறது.


காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயகக்கட்சி செய்த தவறுகளின் இடைவெளியில் பாஜக லாபம் அடைந்தது.


மக்களைப் பிளவு படுத்தியதில் பாஜக தனது நிலையில் முன்னேற்த்தைக் கண்டது.


அமர்நாத் விவகாரத்தை வைத்து மக்களை பிளவுபடுத்தி தூபம் போட்டு பாஜக அரசியல் லாபம்அடைந்தது.


மக்களைப் பிளவுபடுத்தும் விபரீதத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததின் விளைவு காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.


பாஜகவை தீண்டத்தகாத சக்தியாகக் கருதி அதனைவிட்டு விலகியதால் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி முதல்நிலை சக்தியாக உயர்ந் திருக்கிறது. காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து உமர் அப்துல்லா இளம் முதல் வராக பதவியேற்க உள்ளார். அவரை வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம். கடந்த கால படிப்பினைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாததின் விளைவு இன்று ஜம்மு காஷ்மீர் மக்களைப் பிளவு படுத்தும் பிரிவினைவாத சக்தியான பாஜக வலுப் பெற்றிருக்கிறது. பாஜகவின் வெற்றி அம்மாநிலத்தில் தனிப்பட்ட முறையில் காங்கிரஸுக்கும் பொதுவாக ஒன்றுபட்ட இந்தியாவுக்கும் கிடைத்த தோல்வி யாகவே கருதப்படுகிறது.


காஷ்மீரில் பிரிவினைவாதம் தலை தூக்கும் போது ஜம்முவில் அதன் எதிரொலி பாஜக ஊட்டும் மதவாதமாக அது திசை திருப்பப்படும். பாஜகவுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படு கிறதோ அப்போதெல்லாம் குண்டுகள் வெடிக்கின்றன என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கூறினார்.
அதைப் போன்றே பாஜக எங்கே செல்வாக்கு பெறுகிறதோ அந்தப் பிராந்தியம் பின்னடைவை சந்திக்கப் போகிறது என்பதே கடந்த கால உண்மை. அது நிஜமாகி விடக்கூடாது என்பதே நமது பிரார்த்தனை.

ஆதம். ஆரிபின்

ஆதம். ஆரிபின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.