ரைடன்டில் பாகிஸ்தானியருக்கு இனி அனுமதியில்லை
மும்பை, டிச.20 : பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட மும்பை டிரைடன்ட் ஹோட்டலுக்குள் இனி பாகிஸ்தானியர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என, அந்த ஹோட்டலின் தலைவர் ரத்தன் கேஸ்வானி தெரிவித்தார்.
டிரைடன்ட் ஹோட்டல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படுவதை ஒட்டி, பத்திரிகையாளரை சனிக்கிழமை சந்தித்த ரத்தன் கேஸ்வானி இதைத் தெரிவித்தார்.
டிரைடன்ட் ஹோட்டலுக்குள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த எவரையும் அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹோட்டல் பாதுகாப்பு விஷயத்தில் இனி கூடுதல் கவனத்தைச் செலுத்த முடிவெடுத்துள்ளோம். அந்தவகையில், இனி வரும் காலங்களில் ஹோட்டலுக்கு வருபவர்கள் குறித்து முழுவிவரத்தையும் பெற்று பாதுகாக்க முடிவு செய்துள்ளதாகவும் ரத்தன் கேஸ்வானி மேலும் தெரிவித்தார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்