Breaking News
recent

மழையில் நனைந்த கோழி போல உள்ளார் அதிபர் ஜார்ஜ் புஷ்'

மழையில் நனைந்த கோழி போல உள்ளார் அதிபர் ஜார்ஜ் புஷ்'




சியோல், டிச.19: மழையில் நனைந்தக் கோழி போல உள்ளார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் என வடகொரியா கிண்டலடித்துள்ளதாக தென்கொரிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அரசு தரப்பு பத்திரிகையான மின்ஜு ஜோஸன், ஜார்ஜ் புஷ்ஷை இவ்வாறு கேலி செய்து செய்தி வெளியிட்டுள்ளதாக, தென்கொரியாவின் யோன்ஹேப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இராக் மீது போர் தொடுத்தவர் ஜார்ஜ் புஷ். இது இராக் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. புஷ் மீது நிருபர் ஷூவை எறிந்தது கூட அவர் மீதான இராக் மக்களின் கோபத்தையே வெளிப்படுத்தியுள்ளது என்று வடகொரிய பத்திரிகை குறிப்பிட்டுள்ளதாகவும் தென்கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் இராக் தலைநகர் பாக்தாத்தில் பத்திரிகையாளர் கூட்டத்தில் பங்கேற்ற ஜார்ஜ் புஷ் மீது நிருபர் ஒருவர் ஷூவைக் கழற்றி வீசினார். புஷ் தலையைக் குனிந்து கொண்டதால் அவர் மீது ஷூ படவில்லை.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.