கீழக்கரை திருமண நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் பங்கேற்பு
கீழக்கரை, டிச. 28: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் சனிக்கிழமை நடந்த திருமண விழாவில் இலங்கையை சேர்ந்த அனைத்து நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டார்.
இலங்கை அனைத்து நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், இலங்கை அதிபர் ராஜபக்ஷே கட்சியை சேர்ந்த மட்டக்களப்பு அமைப்பாளர் ரவூப்.ஏ. மஜீத், தமிழக முன்னாள் காவல் துறைத் தலைவர் வால்டர் தேவாரம் மற்றும் இலங்கையை சேர்ந்த பலர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கீழக்கரைக்கும்-இலங்கைக்கும் தொழில் ரீதியான உறவு அதிகமாக இருக்கிறது. எனது நண்பர் சம்சுதீன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து இந்தியா வந்துள்ளேன் என்று இலங்கை அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி பேசினார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்