பெரியபட்டணத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்
ராமநாதபுரம், டிச. 29: கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி சார்பில்
பெரியபட்டணத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரியபட்டணம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இவ் விழாவுக்குக் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் அலி தலைமை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் இ. கதிர்வேல் முன்னிலை வகித்தார். கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி கலந்து கொண்டு நாட்டு நலப்பணித் திட்ட முகாம்களின் அவசியம் மற்றும் எதிர்காலத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எம். ஆனந்த் நன்றி கூறினார். மற்றொரு திட்ட அலுவலர் ஜி. முகம்மது இபுராகிம் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்