அபிராமம் பள்ளியில் என்.என்.எஸ். முகாம்
கமுதி, டிச. 28: கமுதி அருகே காடநகரியில் முஸ்லிம் மேனிலைப்பள்ளி என்.என்.எஸ். மாணவர்கள் 10 நாள் சேவை முகாம் புதன் கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது.
துவக்க விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் தலைமையும், பள்ளிக் கல்விக் குழு உறுப்பினர் வி.எம். முகம்மது முத்து அபுபக்கர், மாவட்ட என்.என்.எஸ். திட்ட அலுவலர் ஏ.செய்யது ஒலி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.
தலைமை ஆசிரியர் எஸ்.பஷீர் அகம்மது வரவேற்றார்.
பள்ளித் தாளாளர் ஏ.எம்.முகம்மது இதிரீஸ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உதவித் தலைமை ஆசிரியர்கள் எம். முகம்மது சம்சுதீன், ஏ.கே. சாகுல் கமீது, ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் காடநகரி கணேச மூர்த்தி, அச்சங்குளம் ஜே.கிறிஸ்டோபர், திடட அலுவலர் கே.ஆர்.ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் பேசினர்.
உதவி திட்ட அலுவலர் அ. கண்ணதாசன் நன்றி கூறினார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்