வாஸ்தும் வாஸ்தவமும்
நிறைய பேர் இதில் திடீர் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.மலேசிய தமிழ் பத்திரிக்கைகளில் இப்போது வரும் விளம்பரங்களில் இப்போது இது போன்ற 'ஜல்லி'யடி விசயங்கள் அதிகம்.
இது முன்பு தமிழ் நாட்டு பத்திரிக்கை செய்தது[பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் நிறைந்த பத்தீரிக்கை,இவர்கள் எடுத்த படத்தில்தான் சில ஹிந்தி வார்த்தைகளை முஸ்லிம் பேசுவது போலவும், தமிழ்நாட்டுக்கு சம்பந்தமில்லாத உடை உடுத்தி 'இங்கே வர்ரான் , அங்கே போரான்" என்று சேட்டு ரேஞ்சுக்கு முஸ்லிம் தமிழ் பேசுவது போல் முஸ்லிம்களை அந்நியயபடுத்தியவர்கள்
இப்போது கொஞசம் டி வி சேனல் அதை ஆரம்பித்து இருக்கிறது
சிலருக்கு இருக்கும் பணத்தை பாதுகாக்க, சிலர் விரக்தியின் உச்ச கட்டத்தில் நாடும் வடிகால்
இவர்கள் வீட்டில் எப்போதும் பத்தி மணக்கும்,வாசலில் தண்ணீர் ஊற்று, மற்றும் "எந்திரம்" [இது தாமிரத்தகட்டில் கொஞ்சம் கோடு கொஞ்சம் எழுத்து என்று இருக்கும்]
நல்ல வேலை விவேக் இன்னும் பார்க்கவில்லை, பார்த்து இருந்த்தால்" அட பாவிங்களா..ஒரு மோட்டோர், ஒருவயர் கோட இல்லையே இதப்போய் எந்திரம்னு சொல்ரீங்களெடானு வசனம் பேசியிருப்பார்.
நல்ல வேலை விவேக் இன்னும் பார்க்கவில்லை, பார்த்து இருந்த்தால்" அட பாவிங்களா..ஒரு மோட்டோர், ஒருவயர் கோட இல்லையே இதப்போய் எந்திரம்னு சொல்ரீங்களெடானு வசனம் பேசியிருப்பார்.
நிச்சயம் ஒரு தாடி வச்ச பரதேசி கோலத்தில் யாரவது ஒரு சாமியார் படம் இவர்கள் வீட்டு முன் வாசலில் தொங்கும். இந்த சாமியார்களின் உண்மையான சொத்து மதிப்பு CBI ஆசிரமத்தின் உள்ளே நுழையும் வரை தெரியாது
இது போன்ற நிறைய ஏமாற்று வேலைகளுக்கு மதத்தை ஒரு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.[இது எல்லா மதத்திலும் உண்டு] இதில் வருமான வரி இல்லாமல் ஒரு பெரிய தொகை நம் கண்ணுக்கு தெரியாமல் வியாபாரமாகிறது.
சமீபத்தில் பார்த்த கேள்வி பதில் எனக்கு ஒரு உண்மையை தெரிவித்தது..."பிள்ளைகள் நன்றாய் படிக்க என்ன வாஸ்த்து நல்லது?" பதில் ஏதோ எழுதி இருந்த்தது எனக்கு உதித்த பதில் " குறைந்த பட்சம் பிள்ளயை ஸ்கூலில் சேர்க்க வேண்டும்"
நன்றி: உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்கிற நோக்கம் வளராது,
மனம் மேலும் கீழும் புரளாது....பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Zakir Hussain
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்