Breaking News
recent

வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் என்எஸ்எஸ் முகாம் நிறைவு

வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் என்எஸ்எஸ் முகாம் நிறைவு

வேலூர், ஜன. 3: வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா அடுக்கம்பாறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் கோயில்களில் துப்புறவுப் பணி, தெருக்களை தூய்மைப்படுத்தும் பணி, விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவற்றை நடத்திய மாணவர்களை கிராம மக்கள் பாராட்டினர்.

முகாமின் நிறைவு விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.எச். கதிஜா அசிம் சுல்தானா தலைமை தாங்கினார். பி. கெüஸ்பாஷா வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி கோபிநாத் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.மூர்த்தி மாணவர்களுக்கு பரிசளித்து சான்றிதழ்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் ஜி. சுந்தர், ஒன்றியக்குழு உறுப்பினர் ராதா திருநாவுக்கரசு மற்றும் எ.ஜி. திருமலைராஜ், இராம. முரளி, திட்ட அலுவலர் சி. வீரமணி, உதவித் திட்ட அலுவலர் ஏ.பி. மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.