சிங்கப்பூரில் கல்வி மற்றும் சமூக மேம்பாடு குறித்த சொற்பொழிவு
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சங்கங்கள் மற்றும் ஜாமியா சிங்கப்பூர் ஆகியவை இணைந்து கல்வி மற்றும் சமூக மேம்பாடு குறித்த சொற்பொழிவு 18.01.2009 ( 21 முஹர்ரம் 1430 ) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சுல்தான் மஸ்ஜித் இணைப்பு அரங்கில் நடைபெற இருக்கிறது. இத்தகவலை இந்நிகழ்வின் நெறியாளர் பன்னூலாசிரியர் டாக்டர் சையது இப்ராஹிம் ( ஹிமானா சையது ) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜாமியா சிங்கப்பூர் தலைவர் ஹாஜி அபுபக்கர் மைதீன், பென்கூலன் மஸ்ஜித் நிர்வாகக்குழு தலைவர் ஹாஜி எஸ்.எம்.அப்துல் ஜலீல் முன்னிலை வகிக்கின்றனர்.
சுற்றுச்சூழல்,நீர்வளத்துறை மற்றும் முஸ்லிம் அலுவல்களுக்கான பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு டாக்டர் யாகூப் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.
மஸ்ஜித் அப்துல் கபூர் இமாம் மவ்லவி எஸ்.ஏ. ரபீக் அஹமது பாஜில் பாகவி, பென்கூலன் மஸ்ஜித் இமாம் மவ்லவி அப்துல் கையூம் பாகவி ஆகியோர் உரை நிகழ்த்த இருக்கின்றனர்.
ஓ.எச். அப்துல் மஜீது இறைகீதம் பாட இருக்கிறார்.
மேலதிக விபரம் பெற எச்.எம். சலீம் ( 97841814 ) மற்றும் ஹாஜி நசீர்கனி (96524721) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
தகவல் உதவி : முஸ்லிம் செய்தி நிறுவனம் ( எம்.என்.ஏ. )
AdiraiPost
கல்வி
சமூக மேம்பாடு
சிங்கப்பூர்
சொற்பொழிவு
சிங்கப்பூரில் கல்வி மற்றும் சமூக மேம்பாடு குறித்த சொற்பொழிவு
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்