Breaking News
recent

We Are With HAMAS - PFI Protests (நாங்கள் ஹமாசுடன்)

கடந்த சில வருடங்களாக உலகத்தில் மனிதகுல எதிரியான இஸ்ரேல், கடந்த சில நாட்களாக தன்னுடைய தீவிரவாதத்தை பாலஸ்த்தீன் மீது கட்டவிழ்த்துவிடுகின்றது. பல உயிர்களை கொடூரமாக கொன்று வருகிறது.எனவே இதனை கண்டிக்கும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.


அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் அரசு பணிமனை முன்பாக உலக பயங்கரவாதி இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தேசிய அரசியல் மாநாட்டு ஒருங்கினைப்புக் குழுவின் மாவட்ட செயளாலர் எஸ். செய்யது இபுறாஹிம் தலைமையேற்று நடத்த மனித நீதிப் பாசறையின் மாவட்ட செயளாலர் அப்துல் ஜமீல், மாவட்ட தலைவர் பி. அப்துல் ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கண்டன உரையாற்ற வருவதாக இருந்த தமுமுக வின் மாநில துனைச் செயளாலர் பேராசிரியர் ஹாஜாகனி அவர்கள் வராததால் தமுமுக வின்மாவட்ட தலைவர் ஜனாப் சலிமுல்லா கான் அவர்கள் தலைமையில் முக்கியமான் தமுமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.




நிகழச்சியில் இஸ்ரேலிய பயங்கரவாத்தை கண்டித்தும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரானுவ ஆயுதங்களையும், ஹெலிகாப்டர்களையும் கொண்டே இஸ்ரேலிய தீவிரவாத இரானுவம் அப்பாவி பாலஸ்த்தீன மக்களை கொன்று குவிக்கின்றது என்பதால் இந்தியாவை கண்டித்தும்,இந்தியா இஸ்ரேலுடன்இராஜ்ஜிய உரவை துண்டிக்க வேண்டும் என்றும் கோசங்கள்எழுப்பப்பட்டன.


நிகழச்சியின் இறுதியல்மனித நீதிப் பாசறையை சோந்த ஜனாப்ஃபைசல் அவர்கள் நன்றியுரை கூற நிகழச்சி நிறைவுற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள்கலந்து கொண்டனர்.

முகவைத்தமிழன்

முகவைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.