Breaking News
recent

ஜும்மா மசூதி முன்னாள் இமாம் மறைவு

தில்லியில் உள்ள ஜும்மா மசூதியின் இமாமாக இறைத் தொண்டு ஆற்றிய மெüலானா சையது அப்துல்லா புகாரி (87) தில்லியில் புதன்கிழமை காலை மரணம் அடைந்தார்.

அவருக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். அவருடைய தந்தையார் மெüலானா சையது ஹமீது புகாரி ஜும்மா மசூதியின் 11-வது இமாமாகப் பதவி வகித்தார். அப்துல்லா புகாரி 12-வது இமாமாக அடுத்து பட்டத்துக்கு வந்தார். இப்போது அவருடைய மகன் சையது அகமது புகாரி இமாமாகப் பதவி வகிக்கிறார்.

ராஜஸ்தானின் சம்பார் என்ற இடத்தில் பிறந்த மெüலானா சையது அப்துல்லா புகாரி தில்லியில் உள்ள தார்ஸ்-இ-நிஜாமி மதப் பள்ளியில் கல்வி பயின்றார். அரசியல் ரீதியிலான கருத்துகளைத் தெரிவித்து வந்ததால் அவருடைய பெயர் தேசிய அரசியல் அரங்கில் பிரபலமாக இருந்தது.
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.