Breaking News
recent

முத்துப்பேட்டை சகோதரர்கள் சாலைவிபத்தில் மரணம்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே சரக்கு ஆட்டோ -மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

முத்துப்பேட்டை, குண்டாங்குளம் தெருவைச் சேர்ந்தவர் என். பெரோஸ்கான் (30), பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ப. மரைக்கான் (25). இவர்கள் இருவரும், திங்கள்கிழமை மாலை முத்துப்பேட்டையில் இருந்து அதிராம்பட்டினத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

கருங்குளம் கிழக்கு கடற்கரை சாலையில், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும், அதிராம்பட்டினத்தில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில், பெரோஸ்கான் சம்பவ இடத்திலும், மரைக்கான் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் இறந்தனர். இனாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.சகோதரர்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கத்தை அல்லாஹ் அருள்வானாக.அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையாய் தருவானாக.

சரக்கு ஆட்டோ ஓட்டுநர் முத்துப்பேட்டை எம். வினோத் (22) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.