அண்மைக்காலமாக சில மாநிலங்களுக்கு 'நியூமராலஜி'படி, கூடுதல் எழுத்துக்களை சேர்த்து பெயர் மாற்றம் செய்கின்றனர். இந்த வரிசையில் சிவகாசி நகராட்சியும் சேர்ந்துள்ளது.
சிவகாசியில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் 'SIVAKASI' என்பதை SIVAKAASI என, பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு மாற்றம் செய்தால், நகருக்கு பல நன்மைகள் ஏற்படும் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர். நகராட்சி கமிஷனர் விஜயராகவன் கூறுகையில், 'தீர்மானத்தை அரசுக்கு அனுப்பி வைப்போம். அரசு திருப்தி அடைந்தால், கெஜட்டில் அறிவிப்பு வெளியாகும். அதன்பின் 'சிவகாசி' என்ற ஆங்கில எழுத்தில் கூடுதல் எழுத்துக்கள் சேர்க்கப்படும்' என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நியுமராலஜி எல்லம் பகுத்தறிவா?ஒரு மாவட்டம் அல்லது தாலுக்க,ஊர் மாற்றமோ, பெயர் மாற்றமோ ஏற்கனவே உள்ள கெஜட்ல மாற்ற பல லச்சம் செலவாகுமே அது எப்படி தாலுக்கா,பஞ்சாயத்துக்கு நண்மை சேர்பதாகவோ,வருவாய் கூட்டுவதாகவோ அமையும்?
பதிலளிநீக்குஇந்த அநியாயம் வேற நடக்குதா எங்க ஊர்ல? என்ன சார் காமெடியா இருக்கு, ஒரு எழுத்து கூட சேர்த்தா நகருக்கு நன்மையாமா? என்ன எழவுக்கு இவனுங்கல்லாம் மீட்டிங்க் போடுறானுவன்னே தெரியல.
பதிலளிநீக்கு