Breaking News
recent

எய்ட்ஸ்....Aids...

விபச்சாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள்! அது தெளிவான வெட்கக்கேடானதாகவும், தீமையாகவும் இருக்கிறது.[17;32]





உலகம் முழுவதும் 3 கோடியே 34 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் (15 வயதுக்குட்பட்ட 80,000 குழந்தைகள் உட்பட) பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 80 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். எச்.ஐ.வி உள்ளவர்களில் 39 சதவீதம் பேர் பெண்கள்.



1. மனித உடலுக்குள் புகுந்த எச்.ஐ.வி., வைரஸ், செல்களின் மேற்புறத்தில் "சி.டி.-4' எனும் ஒட்டிக் கொள்ளும் பகுதியை அடைகிறது. அங்கு செல்களின் "சி.சி.ஆர்.5' எனும் கயிறு போன்ற பகுதி எச்.ஐ.வி., வைரசையும் நம் உடல் செல்லையும் பிணைக்கிறது.




2. செல்லின் மேற்புறத்தில் ஒட்டிக் கொண்ட எச்.ஐ.வி., வைரசின் ஒரு பகுதி கரைந்து, செல்லுடன் அப்படியே கலக்கத் தொடங்குகிறது. எச்.ஐ.வி., வைரசுக்குள் உள்ள, அது பல்கிப் பெருகத் தேவையான மரபணுப் பொருட்களான ஆர்.என்.ஏ., மற்றும் என்சைம்கள் செல்லுக்குள் கலக்கின்றன.




3. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போல், மனித செல்லுக்குள், அதை விட சிறிய எச்.ஐ.வி., புகுந்து அந்த செல்லை வைரஸ்கள் பல்கிப் பெருக வசதியான மையமாக மாற்றுகிறது. செல்லுக்குள் புகுந்த ஓர் இழையிலான ஆர்.என்.ஏ., இரு இழைகளுடைய டி.என்.ஏ.,வாக மாறுகிறது.




4. இந்த டி.என்.ஏ., ஏற்கனவே உடல் செல்லில் உள்ள உண்மையான டி.என்.ஏ.,வை "ஆள்மாறாட்டம்' செய்யும் பணியில் ஈடுபடுகிறது. மனித செல்லின் டி.என்.ஏ.,வில் ஒட்டிக் கொள்ளும் எச்.ஐ.வி., வைரஸ் டி.என்.ஏ., கடைசியில் மனித உடல் செல்லின் டி.என்.ஏ.,வை எச்.ஐ.வி., டி.என்.ஏ.,வாக மாற்றி விடுகிறது.




5. இந்த டி.என்.ஏ.,விலிருந்து மீண்டும் எச.ஐ.வி.,க்கான ஆர்.என்.ஏ., உருவாகிறது. இதனுடன் புதிய எச்.ஐ.வி., வைரஸ்கள் உருவாகத் தேவையான பொருட்கள் ஒன்று சேர்கின்றன.




6. செல்லின் சுவரின் அருகே எச்.ஐ.வி., வைரஸ் புதிதாக உருவாகிறது. அது முழுப்பரிமாணம் பெற்ற இன்னொரு வைரசாக உருவாகிறது. செல்லிலிருந்து பிரிந்து புதிய வைரசாக இன்னொரு செல்லை தாக்கப் புறப்படுகிறது. ஒரு செல் முற்றிலுமாக அழியும் வரை அங்கிருந்து நிறைய எச்.ஐ.வி., வைரஸ்கள் உருவாகின்றன.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.