Breaking News
recent

பாபர் மசூதி :தண்டனை தர தயக்கம் ஏன்?



“பாபர் மசூதியை இடித்தது பா.ஜ.க. மற்றும் சங் பரிவார் அமைப்புகள்தான். இதை செய்ததற்காக என்ன தண்டனை கொடுத்-தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம்’’ என்று, சுஷ்மா சுவராஜ் ஆவேசமாகக் கூறினார்.

லிபரான் ஆணைய அறிக்கை மீதான விவாதம் நேற்று இரண்டாவது நாளாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. மக்களவையில் நடைபெற்ற இந்த விவாதத்தில், மக்களவையின் பா.ஜ.க.வின் துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, மத்திய அர-சுக்கு சவால் விடும் வகையில் ஆவேசமாக பேசினார். அவர் தனது உரையில் பேசியதாவது:

மசூதி இடிக்கப்பட்டது குறித்து சி.பி.அய்., விசாரணை நடத்தியது. இதுபற்றி லிபரான் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடிப்பு சம்பவத்தில் சதி இருந்ததா, இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்திய சி.பி.அய், தனது பதிலாக சதி நடந்துள்ளது என்பதை நிரூபிக்க முடியவில்லை என்று தெரிவித்து-விட்ட-தாக, லிபரான் அறிக்கை கூறுகிறது. அதேபோல, மத்திய_ மாநில உளவு அமைப்புகளும் விசார-ணைக்கு தேவையான ஆவணங்களை தர மறுத்து-விட்டதாகவும், லிபரான் குறிப்பிட்டுள்ளார்.


லிப-ரான் விசாரணை ஆணையத்தின் முன்பாக ஆஜ-ரான அரசியல் தலைவர்கள் அளித்த வாக்கு-மூலங்-களை வைத்துக் கொண்டும், சதி நடைபெற்றதா இல்லையா என்பதை நிரூபிக்க முடியவில்லை என்று லிபரான் கூறுகிறார். அத்வானி போன்ற தலைவர்களை, குறுக்குவிசாரணை செய்த முஸ்லிம் அமைப்பு தலைவர்கள் அளித்த வாக்குமூலத்தில் இருந்தும் சதி நடைபெற்றதை நிரூபிக்க முடிய-வில்லை என்று கூறுகிறார்.


இவ்வாறு நிரூபணம் செய்யவே முடியாத நிலையில், வெறுமனே பா.ஜ.க., மீது சதிக் குற்றச்சாற்று கூறுவது நியாயமற்றது. எந்த முகாந்திரமும் இல்லாமல் சதி செய்து மசூதி இடிக்கப்பட்டதாக கூறுவது தவறு. லிபரான் அறிக்கை என்பது அரசியல் காரணங்களுக்காக பொய்களை கொண்டு ஜோடிக்கப்பட்ட ஒரு ஆவணமே தவிர, இது விசாரணை அறிக்கை அல்ல. இப்போதும் கூறுகிறேன். சவாலாகவே கூறுகிறேன். நாங்கள்தான் மசூதியை இடித்தோம். பா.ஜ.க., மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தான் மசூதியை இடித்தோம். திட்டமிட்டு செய்யவில்லை. மக்களின் எழுச்சியின் விளைவே அது. என்ன தண்டனை தருவீர்கள். எங்களை உங்களால் தண்டிக்க முடியு-மானால், தண்டித்துப் பாருங்கள்.


தண்டனையை ஏற்க தயாராக உள்ளோம். அறிக்கையை தயார் செய்த லிபரான் ஒரு பேட்டியில், வாஜ்பேயியை நல்லவர் என்று கூறுகிறார். அதே வாஜ்பேயியை மற்றொரு பேட்டியில் நிருவாக இயக்குனராக உவமைப்படுத்தி அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்த அறிக்கையை தயார் செய்தது உண்மையில் லிபரான்தானா அல்லது காங்கிரஸ் கட்சியா என்ற சந்தேகம் வருகிறது.

இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பா.ஜ.க., என்றுமே துணை நிற்கும். மாறாக இதுபோன்ற அறிக்-கையினால் நாட்டில் மதக்கலவரங்கள் நடைபெறவே வாய்ப்பு உருவாகியுள்ளது. லிபரான் தனது அறிக்கையில் ஒரு இடத்தில், இந்துக்களின் நலன்களுக்கு குரல் கொடுக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் போன்ற அமைப்புகள் இருப்பதுபோல, முஸ்லிம்களுக்கு எந்த அமைப்பும் இல்லை என்று கூறுகிறார். இதெல்லாம் பொறுப்பற்ற வார்த்தை-கள். ஒருதலைபட்சமான வரிகள். இந்துக்களுடன் முஸ்லிம்களை மோதவிடுவது போன்று உள்ளது இந்த அறிக்கை. இதெல்லாம் நாட்டுக்கு நல்லதல்ல. இவ்வாறு சுஷ்மா பேசினார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.